பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/669

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பருவம் 587 'உலகெலாம்” என்று இறைவர் அடி எடுத்துக் கொடுத் ததும், சோக்கிழார் பெருமானர் உடனே, உலகெ லாம் உணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்கு வாம் என்று பாடியதனால் ஆசுகவி ஆயினர். செய்வ தொன்றும் அறியாது சிந்தை மகிழ்ந்து களிகூர்ந் தென் ஐயன் அணைந்தான் என ஆளும் அண்ணல் அணைந்தான் ஆரூரின் சைவன் அணைந்தான் என் துணையாம் தலைவன் அணைந்தான் தரணி எலாம் உய்ய அணைந்தான் அணைந்தான் என் ருேகை முரசம் சாற்றுவித்தார் என்று பாடியுள்ள பாடல் சேக்கிழார் மதுரகவி பாடும் மதுர கவி என்பதைக் தெரிவிக்கிறது. சோக்கிழார் பெருமா னருக்குச் சித்திரகவி பாடவேண்டிய வாய்ப்பு நேர்ந்திலது. நேர்ந்து இருக்குமாயின் அதனேயும் பாடி இருப்பார். மேலே கூறிய ஆசு மதுரம் பாடும் அவர்க்குச் சித் திரக் கவி பாடுதல் கடின ஆகுமோ? சித்திரம் என்னும் சொல்லுக்கு அழகு என்னும் பொருள் இருத்தலின், சித்திரக் கவி என்னும் தொடர் அழகிய கவியும் ஆகும். இக் காரணத்தினுல் சேக்கிழார், சித்திரக் கவிபாட வல்லவர் என்றும் கொள்ளலாம். அத்தகைய சித்திர (அழகிய) கவிகளை அங்கம் பூம்பாவையின் வளர்ச்சியினைக் கூறுமிடத்துக் காணலாம். தளரும் மின்னின் அங் குரம் எனத் தமனியக் கொடியின் வளர்இ ளம்தளிர்க் கிளே என மணிகினர் ஒளியின் அளவில் அம்சுடர்க் கொழுந்தென அணேவுறும் பருவத் திளவ னப்பிணை அனையவர்க் கேழியர்ண் டெய்த