பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/692

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ஒழிக்கும் திறத்தில் அருகந்தன் உறையா நின்ற பாழிகொல் அவ் உறுவர் அமரும் பள்ளிகொல்மற் றுள்ளார் ஆய பரசமயர் பழிக்கும் படிவாழ் இருக்கைகொல்யாம் பாங்கில் புரிஇச் சிறுவிடு பதத்தில் சிதைத்தால் வருகின்ற பயன்புண் ணியமோ புகழ்கொல்லோ சுழிக்கும் செலவில் பாலிநதி சுரந்து பாய மாலியானைத் தொண்ம்ை எடுப்பு மறையும்விதம் துவன்றி வளர்ந்து விளைசெந்நெல் செழிக்கும் வயல்தண் ட்கநாட்ா சிறியேம் சிற்றில் சிதையேலே செல்வம் செருக்கு குன்றைஅருள் செல்வா சிற்றில் சிதையேலே. (அ. சொ.) சுழிக்கும் செலல்-சுழித்துப் போகும் போக்கில், பாலி நதி-பாலாறு, மாலியானை-பெரிய யானை, தொண்டை-துதிக்கை, எடுப்பு-துரக்குதல்,துவன்றி-நெருங்கி, அருகந்தர்-சமணர்கள், உறையாநின்ற-வாழ்கின்ற, பாழி கொல்-சமணப்பள்ளிகளா (இல்லையே) உறுவர் கோயில்பெளத்த முனிவர் பள்ளிகளா (இல்லையே) பள்ளி முனிவர் வாழ் இடம், இருக்கை-இருப்பிடம், பாங்கு-அழகாக, பதத் தில்-திருவடிகளால், செலவு-செல்கை. விளக்கம் : சேக்கிழார் பெருமானர் திருஞானசம்பந்தர் திருமடத்திற்குத் தீவைத்ததாலும், திருநாவுக்கரசர்க்குப் பல தீங்குகளை இழைத்ததாலும், சமணர்களையும் அவர் வாழ் இடங்களையும் வெறுப்பவர். சமணப்பள்ளிகளை, பாழிகளை இடித்து மகேந்திரவர்ம பல்லவன் குணபர சக்சுரம் கட்டின்ை என்பதைச் சேக்கிழார் கூறும்போது,