பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/693

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றில் பருவம் 611 வீடறியாது சமணர்மொழி பொய்என்று மெய்யுணர்ந்த காடவனும் திருவதிகை நகரின்கண் கண்ணுதற்குப் பாடலிபுத் திரத்தில்அமண் பள்ளியொடு பாழிகளும் கூடஇடித் துக்கொணர்ந்து குணபரஈச்சரம்எடுத்தான் என்று எவ்வளவு குதுகலமாகக் கூறுகின்ருர் பாருங்கள்! இப்படி எண்ணித்தான் எங்கள் சிற்றில் சிதைத்திரோ என்று சிறுமியர் செப்பலாயினர். 'ஒன்றைப் புரிவதால் புண்ணிய மாவது, புருஷார்த்தமாவது உண்டாதல் வேண்டும். எங்கள் சிறு வீட்டைச்சிதைக்கின்றிரே இஃது உங்கட்குப் புண்ணியமோ புகழோ தருமா?' என்று இரந்து கூறினர் சிறுமியர். திரு. பிள்ளே அவர்கள் இப்பாடல் மூலம் பால் ஆற்றின் பலவகைச் சிறப்பையும், அந்நதியின் பாய்ச்சலால் நாட்டில் நெல்லின் வளர்ச்சியின் மேம்பாட்டையும், சைவ சமயத்தில் தமக்கு இருக்கும் பற்றையும், பிற சமயங்களிடத்தில் தமக்கு இருக்கும் வெறுப்பையும் உணர்த்தலுற்றனர். ஆறுகள் வெள்ளம் மிக்கு ஒடுகையில் நீரைச் சுழித்துக் கொண்டு ஒடுதலே இன்றும் காணலாம். முன்னுெரு சமயம் காமதேனு இறைவனது ஊர்தியான விடையைக் கண்டு காமுற்றது. அதனுல் கருக்கொண்டது. நந்திமலையில் விசிட்டர் தவம் செய்து கொண்டு இருந்தனர். அதுபோது தமது நித்திய வேள்விக்குப் பஞ்ச கெவாவியம் கிடைக்கப் பெருமையால் ஒரு தருப்பையை எடுத்துக் கன்முக காமதேனுவினிடம் அனுப்ப, அதைக்கண்ட காமதேனு மடி சுரந்து அம்மலையில் பாலைப் பொழிந்தது. அஃது ஆருகப் பெருக்கெடுத்தது அதுவே பாலாருகும். இதனேக் காஞ்சிப் புராணம, பேரிசைப் புவிமேல் யார்க்கும் பெட்டன பெட்ட வாறே சீரிதில் கொடுக்கும் தேனுத் தரவரும் செழுநீர்ப் பாவி என்று அறிவிப்பதை அறியவும். இது பாலியின் வரலாறு.