பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/837

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுதேர்ப் பருவம் 755 தவமும் தவமுடை யrர்க்கு ஆகும் அவம்அதனை அஃதிலார் மேற்கொள் வது என்றும், "நோற்பார் சிலர், பலர் நோலாதார்' என்றும் கூறியுள்ளனர். மேலும், தவத்தின் பெருமை இத்தன்மைத்து என்பதையும் திருவள்ளுவர், ஒன்னர்த் தெறலும் உவந்தார் ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும் என்றும், வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டும் முயலப் படும் என்றும், கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு என்றும் கூறுதல் காண்க. இவற்றை எல்லாம் உளங் கொண்டே, “மேதகவுறுந்தவம்” என்று கூறிஞர் ஆசிரியர். அருளின் விளக்கத்திற்கு அன்பின் தொடர்பு இன்றி யமையாததாகும் அருள் இன்னது என்பதைப் பரிமேலழகர் விளக்கும்போது, 'தொடர்பு பற்ருது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை' என்றனர். மனக் குடவர், 'அருளுடை மை யாவது யாதானும் ஒர் உயிர் இடர்ப் படின், அதற்குத் த ை உயிாக்கு உற்ற துன்பத்தினல் வருந்து மாறு போல வருந் ம் ஈ.ாமுடைமை ஆகும்” என்று விளக் கினர். காளிங்கர் விளக்கம் தரும்போது, "அனைத்துயிர்க்கும் ஒப்ப நிகழ்வதாகிய அருளில்வழி, மற்றவர் செய்யும் தவம் வஞ்சனை உடைத்த ப் அ ஞ்சத் தக்கதாக லானும் துறவறம் பூண்பார்க்கு நிறை அருள் வேண்டும்' என்றனர். அன்பினைப் பற்றி விளக்கம் தரவந்த பரிமேலழகர், "வாழ்க்கைத் து னடம் புதல்வரும் முதலிய தொடர்புடை யார்கண் காதல் உடையன் ஆதல், இல்லறம் இனிது நடத் தலும், பிற உயிர்கள்மேல் அருள் பிறத்தலும் அன்பின் பயன்