பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/838

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

756 சிறுதேர்ப் பருவம் ஆதலின் இது வேண்டப்பட்டது” என்றனர். மனக்குடவர் அன்புடைமையாவது, 'தன்னச் சார்ந்தார் மாட்டுக் காத லுடையவன் ஆதல்” என்றனர். பழைய உரைகாரர், 'தன் புதல்வரிடத்து அன்புடைமை, உயிர்களிடந்தோறும் உண்டாக வேண்டும் ஆதலின் அன்புடைமை ஆயிற்று' என்றனர். பரிதியார், 'அன்புடைமை ஆவது புதல்வரிடத் திலே, ஆத்மாக்களிடம் தோறும் உண்டாக வேணும். ஆத லால் அன்புடைமை ஆயிற்று” என்றனர். 'அன்பின்றேன் எவை இருந்தும் பயன் இல்லை என்பதை வள்ளுவர் நன்கு உணர்த்தி யுள்ளனர். அன்புடையவர்கள் தம் என்பையும் ஈவர் என்றும், ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு அன் போடியைந்த வழக்காகும் என்றும், அவ்வன்பு ஆர்வம் உடைமையையும், அவ்வார்வமுடைமை நண்பென்னும் நாடாச்சிறபையும் தரும் என்றும், உலகில் இன்புற்ருர் எய் தும் சிறப்பெல்லாம் அன்புற்று அமர்ந்த பயன்' என்றும், இவ்வன்பு அறத்திற்குமட்டும் அன்றி, மறத்திற்கும் துணையா கும் என்றும், அன்பில்லாத உயிரை அறக்கடவுள் அழிக்கும் என்றும், உள்ளதில் அன்பில்லாதவர் வாழ்க்கையில் வளர்ச்சி அடைய முடியாது என்றும், அகத்துறுப்பாகிய அன்புதான் உறுப்பே ஒழிய, இடம் பொருள் ஏவல் முதலிய புறத்துறுப் புக்களால் பயன் இல்லே என்றும், அன்பின் வழி நின்ற உடம்பே உயிர் நின்ற உடம்பு. அவ்வன்பு இல்லாத உடம்பு எலும்பின் மீது தோல் போர்த்த உடம்புதான்’ என்றும் கூறித் தெளிவுபடுத்தி யுள்ளனர். கம்பரும் அன்பின் மாட்சியின, என் பென்ப தியாக்கை என்பதுயிர்என்பது இவைகள் எல்லாம் பின் பென்ப அல்ல வேனும் தம்முடை நிலையில் பேரா முன்பென்ப உளதென் ருலும் முழுவதும் தெரிந்த ஆற்ருல் அன்பென்ப தொன்றின் தன்மை அமரரும் அறிந்த தன்ருல் என்று பாடி இருத்தல் காண்க. விநாயகபுராணம் இவ்வன்பை மறக்கல் பாற்று என்பதற்குரிய காரணத்தை "நொதுமலரும்