பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/879

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுதேர்ப் பருவம் 797 தவர் புகழும், இனிமேல வருவபவர் நலம் புகழும் நீடு வழா' என்று வாழ்த்துக் கூறினர். இத்திருவாடுதுறையினைச் சார்ந்த பெரியோர்களான பேரூர். ரீ வேலப்ப தேசிகர், (இவர் சிவஞான முனிவரின் ஞானசிரியர்) பூ சிவஞான முனிவர், ரீ கச்சியப்ப முனிவர்-மதுரகவி ரீ சுப்பிரமணிய முனிவர் தண்டவராயத் தம்பிரான் சுவாமிகள் முதலியோரும் வாழவேண்டும் என்னும் கருத்திலும் இவ்வீற்றுவாழ்த்துப் பாவினப்பாடி யுளளனா. நந்தியம் பெருமான், சனற்குமாரமுனிவர், சத்தியஞான தரிசினிகள் இவ்விருசந்தான வழியில் பின்வருபவரும் முன்னேர் புகழ் பெற்றது போலப் பெறக்கூடியவர் ஆதலின் 'நண்பு புனே தவர் புகழும் இனிமேலும் வருபவர் நயப் புகழும் நீடு வாழ' என்றனர். சேக்கிழார் பெருமாளுர் புராணமே மாபுராணம் எனத் தகும். திருத்தொண்டர் புராணத்துள் ஒருவர் புராணம் மட்டும் இல்லை. தனி யடியார்கள் புராணமும், தொகை அடி யார்கள் புராணமும் உள. ஒவ்வொருவர் வரலாறு புராணம் என்றே குறிப்பிடப் பட்டுள்ளது. ஒவ்வொரு புராணத்தை யும் சேக்கிழார் பாடும்போது அவ்வரலாற்றிற்குரிய நாடு, நகர், ஆறு, மக்கள் வாழ்வு இவற்றை யெல்லாம் விடாது பாடியுள்ளனர். ஆகவே, அவர் நூல், மாபுராணம் தானே! சேக்கிழாரே தமது புராணத்தை எடுக்கும் மாக்கதை' என்றே குறிப்பிட்டுள்ளனர். மாக்கதை எனினும், மாபுராணம் எனினும் பெரிய புராணம் என்ற பொருளைத் தருவதே ஆகும். பெரிய புராணம் என்ற பெயர்க்குக் காரணம், செயற்கரிய செயல்களைச் செய்த பெரியவர்களைப் பற்றிய புராணம் என்பதாம். பெருமையுடைய, பெரிய என்ற பொருள்களும் தருதலின் மாபுராணம் என்பதும் பொருத்தமே.