பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



டாக்டர் இராசமாணிக்கனார்

131

'தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்னடி யோங்கட்

கென்று வான்தாழ் புனற்கங்கை வாழிசடை யானைமற் றெவ் வுயிருக்கும்  
சான்றாம் ஒருவனைத் தண்டமிழ் மாலைகள் - - - - சாத்தினரே. ” 

3. நாயன்மார் திருப்பதிகச் செய்யுளே புராணச்செய்யுளில் அமைக்கப்பட்டிருக்கும். . .

      "செய்யமாமணிஒளிதுது திருமுன்றின் முன்தேவா சிரிய் - - 
                                                       (சார்ந்து, 
       கொய்யுலா மலர்சோலைக் குயில்கவ மயிலாலும் ஆருராரைக்
       கையினால் தொழாதொழிந்து கணியிருக்கக் காய்கவர்ந்த . . . (கள்வனேன்’ என்(று)
       எய்தரிய கையறவால் திருப்பதிகம் அருள் செய்தங் . . . . (கிருத்தார் அன்றே.' 

4. திருப்பதிகத்தின் கருத்து புராணத்தில் - பல பாக்களில் விளக்கப்பட்டிருக்கும். சம்பந்தர் தோடுடைய என்று தொடங்கிப்பாடிய பதிகத்தின் கருத்தைச் சேக்கிழார் பல செய்யுட்களில் (செ. 75-79) விளக்கிக் கூறியுள்ளார். தாம் இருந்த மடத்திற்குச் சமணர் வைத்த தியைச் சம்பந்தர், 'பையவே சென்று பாண்டியற்காக என்று ஏவினர். அவர் 'பையவே' என்று சொன்னதற்குரிய காரணங்களைச் சேக்கிழார் விளக்குதல் நயமுடையது.


    பாண்டிமா தேவியார் தமது பொற்பல் பயிலுநெடு (மங்கலநாண் பாத் காத்தும்,
   ஆண்டகையார் குலச்சிறையார் அன்பினாலும், அரயன் " (பால் அபராதம் உறுதலாலும்,'