இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
132
சேக்கிழார்
மீண்டுசிவ நெறியடையும் விதியி னாலும், வெண்ணிறு - (வெப்பகலப் புகலிவேந்தர் திண்டியிடப் பேறுடையான் ஆதலாலும் திப்பணியைப் 'பையவே செல்க' என்றார்".
5.சேக்கிழார் நாயன்மார் பதிக வகைகளை அப்படியே தம் பாக்களில் வைத்துப் பாடியுள்ளார் சான்றாக, அப்பர் திருப்பூந்திருத்தி மடத்தில் தங்கி இருந்த பொழுது (1) பல்வகைத் தாண்டகம், (2) பரவும் தனித் தாண்டகம், (3) அடைவு திருத்தாண்டகம், (4) திரு அங்கமாலை முதலியவற்றைப் பாடினார்’ என்று ஒரே பாட்டில் இவ்வகைகளை அடக்கிப் பாடியிருத்தல் கவனிக்கத்தக்கது.
'பல்வகைத் தாண்டகத் தோடும் பரவுத் தனித்தாண் டகமும் அல்லள் அறுப்பவர தானகி தடைவு திருத்தாண் டகமும் செல்னதி காட்டிப் போற்றும் திருஅங்கமாலையும் உள்ளிட்டு) எல்லையில் பன்மைத் தொகையும் இயம்பவினர் ஏத்தி(இருந்தார்."
6. நாயன்மார் பாடிய பதிகச் சந்தத்திலேயே அப்பதிகங்களைக் குறிக்கும் இடங்களில் சேக்கிழார் பாக்களும் அமைந்திருத்தல் கண்டு இன்புறத்தக்கது. பித்தா, பிறைசூடி என்ற திருப்பதிகத்தைச் சுந்தரர் பாடினார் என்று கூறும் சேக்கிழார் பாக்களும் இந்தளப் பண்ணில் அமைந்திருத்தல் படித்துப் பாராட்டத்தக்கது. - -
"கொத்தார்மலர்க் குழலாளொடு கூறாய் அடி யாவர்பால், மெய்த்தாயினும் இனியானை அவ் வியன்நாவலர் பெருமான் பித்தா, பிறைசூடி, எனப் பெரிதாம்திருப் பதிகம் இத்தாரணி முதலாம்உல கெல்லாம்உய எடுத்தார்."