பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



134

- சேக்கிழார்

புராணத்தில்,

       “...சறி. லாதார் தமக்கன்பு தந்த 
        அடியார் செய்தனவே தவமாம் அன்றோ சாற்றுங்கால்’ 

என்ற அடிகளில் ஆண்டிருத்தல் காண்க.

திருமந்திரம், சேக்கிழார் பாடியுள்ள திருமூல புராணத்தைக் காணின், அவர், திருமந்திரத்தைத் திறம்பட படித்துணர்ந்தவர் என்பது தெள்ளிதிற் புலனாகும் சேக்கிழார் தில்லைவாழ் அந்தணர் புராணத்தில் இறைவனது இலக்கணத்தை,

             ஆதியா, நடுவு மாகி அளவிலா அளவு மாகிச் 
             சோதியாய் உணர்வு மாகித் தோன்றிய (பொருளுமாகி. 

என்று கூறியுள்ளார். இக்கருத்து

             "யாரறி வாரெங்கள் அண்ணல் பெருமையை 
              யாரறி வாரந்த அகலமும், நீளமும் 
              பேரறி யாதபெருஞ்சுடர் ஒன்றதின்
              வேரறி யாமை விளம்புகின் றேனே.” 

எனவரும் திருமந்திரச்செய்யுளில் பொதிந்திருத்தல் காணலாம்.

சைவ சித்தாந்தம். சைவ சித்தாந்த சாத்திரங்க பதினான்கனுள் சிறந்தனவாகக் கூறப்படும் சிவஞான போதம், சிவஞான சித்தியார் என்பவற்றிற் குறிக்கப்படு: விழுமிய சித்தாந்தக் கருத்துகள். இந்நூல்கள் வெளிவரா காலத்திலேயே சேக்கிழாராற் பெரிய புராணத்து கூறப்பட்டுள்ளன.

1. சேக்கிழார், மானக்கஞ்சாற நாயனாரது அடியா பக்தியைப் பாராட்டுமிடத்து. அவர் சிவனடியாரை