பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 U-) சேக் கிழார்

9. மாறவர்கள் குல குன்றத்து ர்ச் சேகர பாண்டியன் - சேக்கிழான் (&l.ւհ. 1270-1305) &:).ւմ. 1300 ஆடவல்லான்.

குன்றத்தூர் சேக்கிழார் மரபினர். சேக்கிழார் புராண ஆசிரியர் அறிவித்தபடி, நீண்ட காலம் அரசியல் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது, அவர்கள் பெற்றிருந்த உத்தம சோழப் பல்லவராயர், துண்டக நாடு உடையான், அரையன், முனையதரையன்' என்னும் பட்டங்களால் விளக்கமாகிறது. இம்மரபினர் தமிழ்நாட்டுச் சிவன் கோவில்கள் பலவற்றுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர் என்பது மேற்குறித்த கல் வெட்டுகள் குறிக்கும் செய்தியாகும். - -

பெரியபுராண ஆசிரியர் யாவர்? மேற்கண்ட சேக்கிழார் ஒன்பதின்மருள் முதல்வரே-சேக்கிழான் மாதேவடிக்ள் ராமதேவன் என்ற உத்தமசோழப் பல்லவராயன் என்பவரே-பெரியபுராணம் பாடிய நம் சேக்கிழாராக இருக்கலாம் என்பது அறிஞர் கருதுகின்றனர். சேக்கிழார் காலம் இரண்டாம் குலோத்துங்கன் காலமாகும் என்பது கல்வெட்டு அறிஞர்-வரலாற்று அறிஞர் இவர் தம் முடியாகும். அவன் காலம் கி.பி. 1133-1150. அவன்மகன் இரண்டாம் இராசராசன் (கி.பி. 1146-1173) என்பவன். சேக்கிழார் புராணப்படி, இந்த இராசராசன், சேக்கிழார் முதல் அமைச்சராக இருந்தபொழுது இளவரசனாக இருந்தவன். இவனது 17 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிற்றான் சேக்கிழார் பெயர் குறிக்கபட்டுள்ளது. இராசராசன் காலத்தில் அவர் ஒய்வுபெற்றுச்

மு. இராகவையங்கார் 'சாஸனத் தமிழ்க்கவி சரிதம்'