பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix ஆய்வில் ஈடுபட்டோருக்கு அரிய தூண்டுகோலாக அமைந்துள் ளது மறவர் சீமையைப் பற்றியும் அந்நாட்டை ஆட்சி செய்த சேதுபதிகள் பற்றியும் ஆய்வுசெய்கின்ற வரலாற்று ஆய்வாளர்கள் இந்நூல் ஒன்றைப் படித்தாலே ஓரளவு தங்களுக்குத்தேவை யான செய்திக் குறிப்புகளைத் திரட்டிவிட முடியும் என்ற அளவில், மிகுந்த செய்திகளைக் கொண்டுள்ள ஒருநூலாக இது வெளி வருகிறது. இதனை அறிஞர் உலகமும்ஆய்வாளர் உலகமும் போற்றிப் பாராட்டும் என்று மனப்பூர்வமாக நான் கருதுகிறேன். இத்தகைய ஒரு நூலை வரைந்து வெளியிட்டுள்ள டாக்டர் எஸ்.எம். கமால்.அவர்களை அன்போடுவாழ்த்துகிறேன். இது போன்று, மேலும் பல நூல்களை அவர் எழுதி அறிஞர் உலகுக்கு வெளியிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள் கிறேன். நடன. காசிநாதன்