பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/849

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 65 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : இராமேசுவரம் ஆதினகர்த்தர் இராமநாதபண்டாரம் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1686 தாரண ஆண்டு ஆடிமாதம் 15ந் தேதி (கி.பி. 15 醬 நி 4. செப்பேட்டின் பொருள் : இராமேசுவரம் இராமநாத சுவாமி பர்வதவர்த்தினியம்மன் நெய்வேதன கட்டளைக்கு கிரா மதானம் இந்தச் செப்பேட்டில் அறுபத்துஇரண்டு சிறப்புப் பெயர் கள், இதனை வழங்கிய சேதுபதி மன்னரது விருதாவளியாகப் கப் பொறிக்கப்பட்டுள்ளன. இவைகளில், குருபூஜை மறவாத கீர்த்திபன் (வரிகள் 30, 31) என்ற ஒரே ஒரு புதிய அடை மொழியைத் தவிர ஏனையவை அனைத்தும் இந்த மன்னரது முந்தையோரது செப்பேடுகளில் காணப்பட்டவை. ரெகுநாத திருமலை சேதுபதியும், ரெகுநாத கிழவன் சேதுபதியும் தஞ்சைத் தரணியில் உள்ள திருவாவடுதுறை திருமடத்தின் பால் மிகுந்த அக்கரைகொண்டு அந்த ஆதின கர்த்தர்களுக்கு பலநிலக்கொடை களை வழங்கியது போல இந்த மன்னரும் அந்த மடத்திற்கு தமது குரு தெட்சணையாக வழங்கியுள்ள காரணத்தினால் *குருபூஜை மறவாத கீர்த்திபன்' என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. o * , இந்த மன்னரது ஆட்சியின் தொடக்கத்தில் பிரதானியாக இருந்தவர் தாமோதரம் பிள்ளை என்பவர். இவரது பணிக் காலத்தில் பல அரிய பணிகளை இயற்றி சேது நாட்டின்