பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் .

189


யுத்தத்திற்கு அரசனுடன் சென்று வேண்டிய காரியங்களை நிர்வகிக்கவும் வல்லவர். இன்னோர் இராஜசமுகங்கட்கு அடுத்தடுத்துச் சென்று வருபவராதலால், சட்டையும் தலைப் பாகையுந் தரித்திருப்பர். இவரைக் கஞ்சுகமுதல்வர் எனவும் வழங்குவர் ; சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற கஞ் சுக முதல்வரீரைஞ் நூற்றுவர் எனத் தம் தமையனுக்கி ருந்த தூதுவரைப்பற்றி இளங்கோவடிகள் குறித்தல் காண்க.*[1] இனிச் சாரணரென்போர் ஒற்றராவார். இன் னோர் , இக்காலத்துப்போலவே, முற்காலத்தும் அரசர்க்குக் கண் போன்று விளங்கினர். செங்குட்டுவனுடைய ஒற்றர் கள் அந்நிய நாடெங்கும் சஞ்சரித்து வந்தனரென்றும், அன் வாறே வேற்றரசரொற்றர்களும் பெருவீரனான நம் சேரன் நாட்செய்திகளைத் தெரிதற் பொருட்டு வஞ்சி மாநகரில் மறைந்து வசித்தனரென்றும் சொல்லப்பட்டுள்ளன.[2] மேற் கூறியவர்களன்றிக் கரணத்தியலவர் (கணக்கர்), கருமவிதின் (ஆணை நிறைவேற்றும் அதிகாரிகள்), கனகச்சுற்றம் (பண் டாரம் வகிப்போர்), கடைகாப்பாளர் (அரண்மனை காவலர்), நகரமாந்தர், படைத்தலைவர், யானை வீரர், குதிரைவீரர் எனப்பட்ட எண்பேராயத்தாரும் செங்குட்டுவன் அரசியலில் தலைமைபூண்டிருந்தனர்.[3] செங்குட்டுவனது அரசியல் முத்திரையானது வில், கயல், புவி என்னும் மூன்றும் அமைந்ததோர் இலாஞ்சளை யாகும். இதனைத் "தென்றமிழ் நாட்டுச் செழுவிற் கயற்

புலி, மண்டலை யேற்ற வரைக்' என்பதனால் அறிகள்[4]


  1. * சிலப். 28. 137-8.
  2. ஷ . 25. 178 - 6.
  3. 1 ஷ . 26. 38.
  4. ஓ ஷை, 25. 171- 2.