பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலவாராய்ச்சி.

181

இவரைக்கொள்ளுதல் பொருந்துமென்று தோற்றுகின்றது. சமுத்திரகுப்தனால் மாளுவதேசம் வெல்லப்பட்ட காலத்தில் அந்நாட்டின் பெரும்பாகம் ஒருவரன்றிப் பல கூட்டத்தாரால் ஆளப்பட்டுவந்ததென்றும், அவன் மகன் சந்திரகுப்தனால் அத்தேசம் குப்த ஏகாதிபத்யத்துள் ஒன்றாக்கப்பட்டதென் றும் சரித்திர நூலோர் *[1] கூறுவர். சேரன் செங்குட்டுவன் 5-ம் நூற்றாண்டினனாயின், அவனட்பரசராய் மாளுவநாட் டை ஆண்டுவந்த கன்னரென்ற கூட்டத்தார் மேற்கூறிய குப்தர் காலத்துச் சிற்றரசர்களே என்று கருதல் தகும்.

இனி, தமிழறிஞர் சிலர், இளங்கோவடிகள் குறித்த நூற்றுவர் கன்னர் என்பது ஆந்திரவரசர் பட்டப்பெயரான சாதகர்ணி ' என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பென்றும், அதனால் நூற்றுவர்கன்னர் என்பது செங்குட்டுவன் கா லத்து ஆந்திரவரசனான ஒருவனையே குறிக்கவேண்டுமென் றுங் கருதுவர். இளங்கோவடிகள் வாக்கை நோக்குமிடத்து, கன்னன், கன்னி என ஒருமையாற் கூறாது கன்னர்[2] எனப் பன்மையாகவும், கங்கைக்கரையிலிருந்த செங்குட்டுவன் அக் கன்னரை அவருடைய வளந்தங்கிய நாட்டிற்கனுப்பியதைக் குறிக்கும்போது, ஆரிய வரசர் ஐயிரு பதின்மரைச் - சீரியல் நாட்டுச் செல்கென் றேவி" என்றும்[3] மாளுவ வேந்தர் " என்றும் ஒரு கூட்டத்தாராகவும் பாடப்பட்டிருத்தலால் நூற்றுவர் கன்னர்" என்ற தொடர் அரசனொருவனைக் குறிப்

பதாகப் புலப்படவில்லை. ஒருதால், சாதகர்ணி என்பதன்


  1. * V. A. Smith's Early History of India. p. 271,276.
  2. சிலப். 26, 176.
  3. ஷ. 27, 176-7.