பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1! சேற்றில் மலர்ந்த செந்தாமரை என்று முனகிக்கொண்டு, க்யூவில் நின்றேன். . புக்கிங் ஆபீஸ் இன்னும் திறக்கப்படவில்லை. நிழலோர மாய் க்யூ வரிசை ஒதுங்கி நின்றது. வரிசையிலுள்ளவர்கள் பேப்பர்கள் வாசித்தனர்; பாடப் புத்தகங்கள் படித்தனர்; வம்பளந்தனர்; சிகரெட் புகைத்தனர்; ஒரு கால் மாறி மறு காலில் நின்றனர். நானும் நின்று கொண்டிருந்தேன். ' மினர்வா டாக்கீஸுக்கு எதிர் வரிசையில் ஒரு ரிக்ஷாக் காரக் குடும்பம் வாழ்ந்து கொண்டிருந்தது. ஒரு பண்டகக் கிடங்குக்கு வெளிப்புறம் அமைந்த ஒரு முழத் திண்ணையில் அந்தக் குசேலக் குடும்பம்" வாழ்ந்து வந்தது. காரை விழுந்த சுவர்ப் பகுதி புகையும் புழுதியும் படிந்து கறுத்துப் போயிருந்தது, மூலையிலே ஒன்றிரண்டு சுரிச் சட்டி.கள், எனாமல் விழுந்த எனாமல் தட்டு, தகரக் குவளை. கிழிந்த மூங்கில் பாய் முதலியன கிடந்தன. திண்ணை விளிம்பிலே ஒரு கிழிந்த கித்தான் சாக்குத் திரை; சாக்குத் திரையின் வழியாக, உள்ளே கந்தைத் துணியில் கிடந்த கருமெழுகுப் பொம்மை அந்தக் கைக் குழந்தை--காலைக் காலை "உதைத்துக்கொண்டு கிடந்ததைப் பார்க்க முடிந்தது; கழுத்திலே கிடந்த சங்கு வெள்ளைப் பாசிச் சரம் அதன் கருமையைத் துண்டாக்கி 'அளந்து காட் டிற்று . திண்ணைக்குக் கீழே தென் பக்கத்தில் மூங்கில் பாயை விரித்து அதன்மேல் இருவர் அமர்ந்திருந்தனர். ஒருத்தி பூளையடைந்த கண்ணும், புழுதியடைந்த' தலையு மாய் வாடி வதங்கிப் போன சாதிக்காயைப் போல் உள்ள கிழவி. மற்றொருத்தி ஊத்தம் போட வைத்த பேயன் பழம் போல மெருகும் மினுமினுப்பும் ஏற்று