பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் கதை! அன்புள்ள பத்திரிகை ஆசிரியர் அவர்களுக்கு, நமஸ்காரம். ஆண்டு 4.மலருக்கு என்னிடமிருந்து அருமையான காதல் கதை ஒன்றை எதிர்பார்ப்பதாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் கே? தடுகோளை நிறைவேற்றி விடுவது என்ற வைராக்கியம் சித்தத்தோடுதான் நானும் நாலு நாட்களாய் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறேன். இந்த நிமிஷம் வரை ஒரு இழல் காதலும் உதயச்டOான பாட்டைக் காணோம். மேலும் இப்போது எனக்கிருக்கும் தொல்லைகளில் காதலைப் பற்றிச் சிந்திக்கவே முடியாது. இப்போது என் சிந்தனையில் இருப்பது காதல் அல்ல; கத்தரிக்காய் தான். ஏனெனில் மத்தியானச் சமையலுக்குக் கத்தரிக்காயோ வேறு என்ன இரவுக் காயோ வாங்கிவர மார்க்கெட்டுக்குச் சென்று வரவேண்டும். இந்த அழகில் கைப்பிடித்த அருமை மனைவி அருகில் இருந்தாலும்கூட, காதலைப் பற்றி எங்கே நினைக்க முடியும்? மனைவியோ மத்தியான ச் சமையலுக்கு செலவு பட்ஜெட்டுடன் வந்து நிற்கிறாள்! கையிலிருக்கின்ற ஒன்றரை அவையும் செலவழித்து விட்டால், அப்புறம் யாரிடமாவது கைமாத்து வாங்கிவர, கார்ச் செலவுக்குக்கூடச் சில்லரை இராதே என்ற கவலை. எனக்கு. மனைவியோ' ' கத்தரிக்காய் வாங்குவதற்காக, பணம் கேட்டு நிற்கிறாள்; நீங்களோ காதல் எழுதித் தந்தால் பணம் தருவீர்கள். எனவே இந்தச் சமயத்தில் நான் காதலாவது கத்தரிக்காயாவது' என்று ஆசிரத்தையாய் இருக்க முடியாதுதான். ஏனெனில் என்னைப்