பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் மலர்ந்த செந்தாமரை பெண். தாயின் குரல் கேட்ட, 'சவம்' ஓடோடியும். வந்தது. 'போ, எரிக்க ஏதாச்சும் பொறக்கிக்கு ணு வா” என்று உத்தரவிட்டு, புகையும் அடுப்பை தினாள், 14னக மேலும் மேலும் அதிகமாக முண்டியது. கண்களைக் கசக்கிக்கொண்டே '12. தினான், அதற்குள் திண்ணையிலே கிடந்த பிள்ளை மேல் சாக்குத் திரை வழியாக சூரிய ரச்மி சுள்ளென்" ") உறைக்கவே, அந்தப் பிள்ளை வில் வீலென்று கத்திற்று. உடனே எழுந்து சென்று குழந்தையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு தாய்ப்பால் ஊட்டினாள்.. 6என்னுடைய கண்கள் அந்தச் 'சவத்தைப் பார்த்தன. பிறந்த மேனியாக, அரைஞான் கயிறுகூட இல்லாமல் திரியும் சிறுவன் அவன். கரிய உடம்பு; 'லிவர்க்யூர்' விளம்பரக் குழந்தையின் வயிற்றைப் போன்ற தொந்தி, சிக்கலும் பிசுக்கும் பிடித்த தலைமயிர், மூக்குத் தொகையிலிருந்து அயிரை மீன் மாதிரி எட்டி எட்டிப் பார்க்கும் சளி. சிறுவன் நாக்கை நீட்டிச் சளியைத் துடைத்து', வாய்க்குள் இழுத்துக் கொண்டான். பிறகு அங்கு கிடந்த சினிமா நோட்டீஸ், டிக்கெட், காகிதம், வைக்கோல், வாழைத்தடை , முதலிய கழிவு எரி பொருள்களைத் தேடிப் பொறுக்கி அடுப்பண்டை . போட்டான். அதற்குள் தலைவாரி முடித்த அந்த யுவதி “ஏ, கெய்லி, பானையை எடுத்துக்கினுபோயி, தண்ணி புடிச்சிவா” என்று கூறினாள். புகைந்து விட்டதால், அடுப்பு லேசில் பற்றிக் கொண்டது. தெருத் திண்ணையில் தாய் குழந்தையை உறங்கப் பண்ணிக் கொண்டிருந்தாள். மூங்கில் பாயிலிருந்த

  • கெய்வி' கடைவாய் வழியே வழிந்தோடும் புகையிலைச்

சாற்றை, புறங்கையால் துடைத்துவிட்டு பானையை எடுத்துக்