பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வியும் பதிலும் இருக்கிறார்கள்! இதெல்லாம் ஏன் இப்படி? அவர்களெல்லாம் வாழ்வானேன்? நான் மட்டும் நாசம் அடைவானேன்? Rஏன்? ஏன்? ஏன்?...... அவனது சிந்தனை அதிக நேரம் செயலாற்றவில்லை. களைத் துப்போன உடம்பும், ஒட்டி உலர்ந்த தம்பியும் அவனைச் சீக்கிரமே செயலற்றுச் சிந்தனையற்ப் போகும்.படி செய்தன: புத்தி மயங்கிவரும் சோர்வோடு அவன் விழுந்து கிடந்தான். (வெளியே சென்றிருந்த பள்னூத்தி மூன்று கையில் ஒரு பொட்டலத்துடன் திரும்பி வந்தான். அவன் வரும்போது வாசலில் புதிதாக நின்று கொண்டிருந்த 'ஸெண்ட் டுட்டா.” போலீ எஸ்காரன் மகன் ஜாத்தி மூன்றைப் பார்த்து ஆவலோடு கேட்டான் : “என்னண்ணே முன்னூத்தி மூணு. லாக்கப்பிலே புதுசா ஒருத்தன் கிடக்காயோ, என்ன விசயம்? அதுவா?, நடு ரோட்டிலே அம்மணமாகக் கிடந் தான்னு நீ நாட் போர் சார்ஜ் பண்ணிக்கொண்டார் திருக்காரு." ஓஹோ , ஜிஞ்சர் பொரியா? 'ஜிஞ்சராவது பிராவது? அந்தக் கண்றாவியை ஏன் கேக் கறே? இரு, வந்து சொல்றேன்" என்று கூறிவிட்டு உள்ளே சென்றான் முன்னூத்தி மூன்று. முன்னூத்தி மூன்று சென்றதும் அந்த ஸெண்ட்ரி' துப் பாக்கியைத் தோளில் சாத்திப் பிடித்தவாறே மேலும் கீழும் இருமுறை பாரா நடந்தான், பிறகு துப்பாக்கியை ஒருபுறமாக வைத்துவிட்டு, முன்னுாத்தி மூன்றின் வருகையை எதிர் நோக்கித் தலையை உள்ளே நீட்டிப்பார்த் தான். -