பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழி தொழில் கடுகு பொரிந்து அடங்குவதுபோல் கைதட்டல்) - கலகலத்து ஓய்ந்த து. - நகரக் காங்கிரஸ் கமிட்டிக் காரியத் தரிசியும், ஜில்லாக் காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினரும், நகரசபைத் தலைவரும், பிரபல மொத்த ஜவுளி வியாபாரியும், முன்னாள் நீதிக் கட்சிப் பிரமுகரும், இந்நாள் சிவனடியார் திருச்சபையின் போ'az கருமான திருவாளர் தில்லைத் தாண்டவராய பிள்ளை யவர்கள் பெருமிதத்தோடு “எழுந்திருந்து தொண்டையை லேசாகக் கனைத்துச் செருமிக் கொண்டு திருவாய் மலரத் தொடங்கினார் : - தேச பக்தத் தியாகிகளே, ஊழியர்கனே ! இன்றைய அவசரக் கூட்டத்தின் காரணம் உங்களுக்குத் தெரித் ததே. நமது நகரத்தின் தோட்டித் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கட்டி..சா? நிலைமையைப் பற்றி ஆலோசிக்கவே நாம் கூடியிருக் கிறோம். நமக்குள்ள செல்வாக்கையும் பலத்தையும் கண்டு பொறாமை கொண்டுள்ள எதிர்க் கட்சிக்காரர் கள் தாம் இந்த வேலை நிறுத்தத்தைத் தாண்டிவிட்டு நமக்கும் பொது மக்களுக்கும் பெருங் : கஷ்டத்தை உண்டு பண்ணியிருக்கிறார்கள். தொழிலாளரின் கோரிக் கைகள் நியாயமானவையாயிருந்தால், அரிஜன சேல்ை