பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி =ష్ట్రా 199

உதவியும் செய்வான் என்பது 11ஆம் சூத்திரத்தில் கூறப்படுகிறது. சீவன் முக்தர்கள் மலநீக்கக் கருத்துடையவராய், அடியார் இணக்கம் உடையவராய், சிவவேடத்தையும், சிவன் கோயிலையும் வழிபடும் நியமம் உடையவராய் நிற்பர் என்பது 12ஆம் சூத்திரத்தில் விளக்கப்படுகிறது.

4. சிவஞான சித்தியார்

இதனையும் அடுத்துவரும் இருபா இருபஃது என்னும் நூலையும் இயற்றியவர் மெய்கண்டார் முதல் மாணவராகிய அருள் - நந்தி - சிவாசாரியார் என்பவர். சிவஞான சித்தியார் என்னும் நூல் சிவஞானபோதத்தின் வழி நூல்; பரபக்கம், சுபக்கம் என்னும் இரண்டு பெரும் பிரிவுகளை உடையது. சிவஞானபோதத்துள் அவையடக்கம் கூறிய ஒரே பாட்டினை அடிப்படையாகக் கொண்டு பரபக்கம் தோன்றியது. சுபக்கம், சிவஞான போதத்தின் 12 சூத்திரங்களின் பொருளை 12 அதிகாரங்களில் விரித்து விளக்குவது.

சிவ ஆகமப் பிரமாணங்களை ஒப்புக்கொள்ளாத சமயங்கள் புறச்சமயங்கள் எனப்பட்டன. வைதிகச் சார்பில்லாத சமயங்களை புறப்புறச் சமயங்கள் எனவும், வைதிகச் சார்புடையவை புறச்சமயங்கள் எனவும் கூறப்பட்டன. புறப்புறச் சமயிகளுள் உலகாயதர், செளத்ராந்திகர் - யோகசாரர் - மாத்யமிகர் - வைபாடிகள் ஆகிய நால்வகைப் பெளத்தர், நிகண்ட்வாதிகள், ஆசீவகர் என்னும் இருவகைச் சமணர் அடங்குவர். பட்டாச்சாரியர் மதம், பிரபாமகரமதம் என்னும் இருவகை மீமாச்சக மதமும், சத்தப்பிர்மவாதம்-மாயாவாதம்

பாற்கரிய வாதம் - கிரீடப் பிரமவாதம் என்னும் நால்வகை ஏகான்ம -

வாதமும் பாஞ்சராத்ரிகம் என்னும் வைணவ மதமும் புறச்சமயத்துள் அடங்கும். இவர் அனைவருடைய சமயக் கொள்கைகளைக் கூறி, சித்தாந்தத்துடன் முரண்வனவற்றை மறுத்துச் சித்தாந்தத்தை நிலை நிறுத்துவதே பரபக்கம் என்பது. இது 301 செய்யுட்களைக் கொண்டது. - . . . . ." .

சுபக்கத்தில் சிவஞான போதப் பொருளே விரித்துரைக்கப் படுதலின், அதுபற்றிய விவரம் இங்குத் தேவை இல்லை. இப்பகுதி 328 செய்யுட்கள் கொண்டது. சித்தியாரின் பெருமையை, 'சிவனுக்கு மேல் தெய்வமில்லை. சித்திக்கு விஞ்சிய நூலில்லை" என்னும் பழமொழியாலும், தாயுமானவர் பாராட்டுரையாலும்" நன்குணரலாம். . . . . . . . . . . . . . . . .