பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#28 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் அறிந்தமை மறப்பதாகின்றது. அல்லது தெளிவின்றி ஒருவாறு நினைப்பதாகின்றது. ஆகவே நுண்ணுடம்பு ஆன்மாவன்று: அது நுண்ணுடம்பின் வேறு என்பது. . . . . . . (உ) அந்தக் கரணங்கள் உயிர் ஆகாம்ை: மனம், புத்தி சித்தம், அகங்காரம் என்னும் நான்கையும் ஆன்மா என்பர் அந்தக்கரணவாதிகள். இக்கொள்கையையும் மறுப்பர் மெய்கண்டார். அவர் கூறுவது: "ஐம்பொறிகள் அறிந்த புலனைச் சித்தம் சிந்தித்து அறியும். மனம் அதைப் பற்றிச் சங்கற்பம் விகற்பம் செய்யும். ஆங்காரம் ஒருப்பட்டு எழும். புத்தி நிச்சயிக்கும். இங்கும் ஒன்று செய்யும் செயலை மற்றொன்று செய்ய அறியாது என்னும் மறுப்பே போதிய தாகும். ஆகவே அந்தக் கரணங்கள் ஆன்மா அல்ல, ஆன்மா அவற்றின் வேறு” என்பது. . . . (ஊ) பிராணன் (பிராணவாயு) உயிர் ஆகாமை: பிராணவாயுவையே ஆன்மா என்று கூறுவர் பிராணான்ம வாதிகள். இதற்கும் மறுப்பு உண்டு. ‘உறக்கம், விழிப்பு என்ற இருதிற நிலைகளிலும் பிராணவாயு ஒரு தன்மையாகவே இயங்கிக் கொண்டு நிற்கின்றது; ஆயினும் உடம்புக்கு விழிப்பு நிலையில் மட்டுமே இன்பதுன்ப உணர்ச்சி உள்ளது. உறக்க நிலையில் அவை இல்லை. ஒரு தன்மையதாக இயங்கிக் கொண்டிருக்கும் பிராணவாயு இவ்வேறுபாட்டுக்குக் காரணமாதல் அமையாது. மேலும் காற்று அறிவில்லாத சடப் பொருள் என்பது எல்லோர்க்கும் உடன்பாடாக உள்ளது. சடப்பொருளை அறிவுடைமையது எனக் கூறுதல் முருட்டு வாதமாகும். ஆகவே சுகமாகத் துங்கினேன் என்று சொல்லத் தக்க அநுபவமும் பிராணவாயு அல்லாத வேறொன்றினுடை 4. அந்தக்கரணம் - உட்கருவி. 5. பிராணவாயு மூச்சுக்காற்று