பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் இக் குறிப்பிட்ட இரண்டிடத்தும் பூசைக்குரிய மங்கலப் பொருள்களைத் திரட்டுதல் கிரியையில் சரியை, புறத்தில் பூசித்தல், கிரியையில் கிரியை, அகத்தில் பூசித்தல் கிரியையில் யோகம் என்று வழங்கப்பெறும். இவற்றால் வழிபாட்டாளர் அநுபவம் வாய்க்கப்பெறுதல் கிரியையில் ஞானம் என்ப தாகும். யோகம்: யோகம் என்பது வடசொல். கூடுதல்’ அல்லது 'ஒன்றுதல்’ என்பது இதன் பொருள். ஆன்மா இறைவனோடு ஒன்றுதல் அறிவால் அல்லது உடலால் அன்று என்பதை நாம் அறிவோம். ஆனால் மனம் முதலிய அந்தக் கரணங்கள் கண், கை, கால் முதலிய புறக் கரணங்கள்போல் ஆன்மாவிற்குப் பெரிதும் தொலைவாகாது, அதனோடு ஒன்றித்து நிற்றலின் அவற்றால் இறைவனைக் கூடுதலும் யோகம் என்று உபசரித்துக் கூறப்பெறும். புறத்தே பறந்து சென்று திரிந்து உலகப் பொருள்களோடு ஒன்றியே பழகிவிட்ட இம் மனம் முதலிய அந்தக்கரணங்களை அவற்றின்மேல் செல்லாதவாறு அடக்கி அகத்தே நிறுத்தி இறைவனோடு ஒன்றச்செய்தல் என்பது எளிதான செயலன்று. அதனால் அவ்வாறு செய்தற்குப் பல செயல்கள் முதற்கண் வேண்டப் பெறுகின்றன. ஆகவே யோகம் என்பது எட்டுக் கூறுகளாகப் பகுத்துக் கூறப் பெறுகின்றது. அவை இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்று வழங்கப்பெறும். இவற்றுள் இயமம் என்பது நூல்களில் விலக்கப் பெற்ற தீயொழுக்கங்களை அறவே விலக்குதல். இந்நிலையில் இருப்போக்கு இல்லக் கிழத்தியோடு இருத்தலும் ஏதமாகும். மனைவியோடும் மக்களோடும் இருந்தவர்களாகக் குறிப்பிடப் 32. சித்தியார் 8, 21