பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடு பேறு 3.25 காட்டுவதும் காண்பதுவும் தண்கடந்தைச் சம்பந்தன் வாட்டுநெறி வாரா தவம்." என்று நயம்பட அருளியிருப்பது அறிந்து உணரத்தக்கது. இதன் விளக்கம்: "முத்தியில் காண்பான், காட்சி, காட்சிப் பொருள் எனப் பொருள் மூன்றில்லை. காட்சிப் பொருளாகிய சிவம் ஒன்றேயுளது" என்பாரும் முத்தி நிலையை உணர்ந்தவர் அல்லர், “முத்தியில் இம்மூன்றும் உள என்பாரும் முத்தி நிலையை உணராதவர்களே யாவர்” என்பது ஈண்டுச் சுட்டிய வெண்பாவின் பொருளாகும். "இரண்டும் பிழையாய்விடின், உண்மைதான் யாது?” என்ற வினா எழுதல் இயல்பே. “காண்டான் முதலிய மூன்றில் காண்பவனாகிய ஆன்மாவும், காட்சியாகிய அதனது அறிவும், முத்தியில் இல்லாதொழியுமாயின், முத்தியென்று ஒருவருக்குப் பெறுதற்கரிய பேறாய் முடியாது பயனற்றதாய் ஒழியும். அதுபற்றி முத்தியிலும் அம்மூன்றும் உள, அவற்றை ஆன்மா அறியும் எனின் ஆன்மா ஒன்றை அறியுங்கால் மற்றொன்றை அறியமாட்டாதாகலின், தன்னையும் தனது அறிவையும் அறியும்பொழுது சிவத்தை அறியாது மறக்கும்; அவ்வாறு மறக்குமாயின், அதற்குச் சிவானந்தம் இல்லையாம். சிவா னந்தம் இல்லையாகவே, முத்தி நிலையும் இல்லாமையாய் விடும். இதனால் ஆன்மா தன்னையும் தனது அறிவையும் அறியாது சிவம் ஒன்றையே அறிந்து நிற்கும் நிலையே முத்தி நிலையாம். ஆகவே, முத்தி நிலையில் மூன்றில்லை, ஒரு பொருளே உண்டு என்பதற்கு, முத்தி நிலையில் மூன்றும் உளவாயினும், ஆன்மா ஏனை இரண்டையறியாது சிவம் ஒன்றையே அறிந்து நிற்கும்” என்பதே கருத்தாகும் என்று அறியப்படும். 16. வினா வெண்பா-11