குஞ்சித நடம்
குரிசல்
குஞ்சிதநடம் - ஒருகாலைத்துக்கி வளைத்து ஆடும் நடராச கூத்து.
குஞ்சித்த சேவடி - கால்துக்கி வளைத்த திருவடி, எ-டு குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே இருப்பர். (சிசிசுப308)
குடகாயம் - குடக்காற்று. குடத்தால் அளவு படுத்தப்பட்ட ஆகாயம்.
குட்டம் - மடு
குட்டியம் - சுவர். எ-டு குட்டியம் இன்றிநற் கோலம் எழுதுதல் (சநி 18).
குடிபழி - பிறன் இல்விழைதல்,
குடில் - குடிசை
குடிலை - சுத்த மாயை.
குணம் - பண்புநலன். சத்துவம், இராசதம், தாமதம் ஆகிய மூன்றும் பா. எண்குணம்.
குணகுணிபாவம் - குணமும் குணமுடைய பொருளும்.
குணக்கூறு - சாத்துவிகம், இரா சதம், தாமதம் என்னும் மூன்று.
குணத்துவம் - முக்குணமும் வெளிப்பட்டுச் சமமாய் இருத்தல். இதுவே சித்தமாகிய அகக்கருவி.
குண சைவம் - சைவம் 16 இல் ஒன்று.
குணருத்திரன் - குணதத்துவ உருத்திரன்.
குண்டம் - குழி, ஒமகுண்டம்.
குண்டலி - குண்டலமாகிய உந்தி கொப்பூழ் உள்ள இடம், மூலாதாரமாகும்.
குண்டலித்தானம் - மூலாதாரம்.
குண்டலினி - மாமாயை.
குணி - குணமுடைய பொருள்.
குணிப்பொருள் - குணியாகிய பொருள்
குதம் - கழிவாய்.
குமரி - 9 தீர்த்தங்களில் ஒன்று. முக்கடல் கூடுமிடம்.
கும்ப முனிவர் - 18 சித்தர்களில் ஒருவர்.
கும்பிடு - வணங்கு.
கும்பாபிடேகம் - திருமுழுக்கு.
குமுதச் செவ்வாய் - ஆம்பல் போன்ற சிவந்த வாய், எ-டு நேசமார் குமுதச் செவ்வாய் (சிசிபப 29).
குரக்கு - குரங்கு.
குரம்பை - குடிலாகிய உடம்பு. முடைக் குரம்பை - நாற்ற உடல்.
குரல் - 7 பண்களில் ஒன்று.
குரவர் - நன்னெறியுள்ளவர். அறிவுறுத்துவோர். வகை 1. மூவர்: அரசன், ஆசிரியர் (குரு), தந்தை (பிதா) 2. நால்வர். 1) அன்னை, தந்தை, ஆசிரியர், தெய்வம். 2) அப்பர், சுந்தரர், திருநாவுக் கரசர், சம்பந்தர் 3) மெய் கண்டார், அருணந்திசிவம், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார். 4) ஐவர்அரசன், ஆசிரியர், தந்தை, தேசி கன், மூத்தோன் 5. எழுவர்: அரசன், ஆசிரியர், தந்தை, தாய், தேசிகன், மூத்தோன், தெய்வம்.
குருக்கள் - சிவ ஆசிரியர்.
குருலிங்க சங்கமம் - குருவும் சிவமுமான திருக்கூட்டம் ஒ. தாபர சங்கமம்.
குரிசில் - தலைவன், இறைவன்.
95