கெண்மூ
கௌரவம்
கொண்மு - முகில்,
கொத்தை மாந்தர் - புல்லறிவுள்ள மனிதர்.
கொப்புள்-கொப்புளம்,குமிழி.
கொல்லரி உழுவை - கொல்லும் சிங்கம்,புலி,யானை (சிசிப ப. 86)
கொலை-ஐந்துபெரியதீச்செயல்களில் ஒன்று.
கொழு - மழு,
கொள்கை - கோட்பாடு, எ-டு கொள்கையினால் அரன் ஆவர் (சிசிசுப 324),
கொள்ளி வட்டம் - கையில் பிடித்து வீசும் கொள்ளி.
கோகழி தூர்த்தர் - கொடிய காமுகர், தாயர், மனைவியர், தாதியர், தங்கையர், அயவர் ஆகியோரை ஓர்மையில் காணும் கொடுந்தொழில் இயல்பினர் (சிதி 18) கோகனதம்-தாமரை.எ-டு குறிகள் வச்சிரத்தினோடு
கோகனதம் சுவத்தி (சிசிசுப 158),
கோச்செங்கட் சோழநாயனார்:அரசர் சோழநாடு சிவபத்தர். சிவனுக்குச் சோழ நாட்டில் பல கோயில்கள் கட்டியவர். இலிங்க வழிபாடு (63)
கோசம் - 1) சூல்பை 2) உடம்பு எ-டு அன்னமயகோசம்.
கோசரம்-பொறி, உணர்வு, அகப்படுவது, கோசரித்தல்,
கோசரமாதல் - விடயமாதல். கோடல் - கொள்ளுதல்
கோட்டன் - கணபதி.
கோட்பாடு - கொள்கை
கோப்புலிநாயனார்-வேளாளர். திருநாட்டியத்தான்குடி சோழ நாடு. திருக்கோயில்களின் திருவமுதுக்காக நெல்லைச் சேமித்து நாள்தோறும் வழங்கி யவர். இலிங்கவழிபாடு (63)
கோடி- கூறு, தொகுதி, எ-டு கொண்டது ஒரு பொருளைக் கோடி படக்கூறு. கோடும் கொள்ளுதும்.
கோணை - ஆணவம் பா.திருகு,
கோதண்டம் - புருவ நடு. எ-டு தீதிலாக் கோதண்டத்தை (சிசி LIL | 272).
கோதாட்டுதல் -செம்மை செய்தல், சிறப்பித்தல்,
கோதாவரி - 9 தீர்த்தங்களில் ஒன்று.
கோது - குற்றம்
கோதில் - குற்றமிலா. கோதில் குரு.
கோபன் - சிவன். கோமன் -9கோள்களில் ஒன்று.
கோமான் - இறைவன்.
கோரக்கர் - 18 சித்தர்களில் ஒருவர். -
கோரல் - கேட்டல் ஒ. கோறல்
கோல் எரி- நெருப்புக்குழி,
கோவந்து - அரசன், இறைவன் எடுவேதக்கோவந்துமுகத்தில் தோன்றிச் (சிசிபப 276)
கோழை - சிலேத்துமம்
கோள் - கிரகம் கோறல்-கொல்லுதல்.ஒ.கோரல்
கௌரவம் - மதிப்பு, குணங்களில் ஒன்று. எ-டு அடர்ச்சி மிகும் கெளரவர்.
100