பேறு
பொருட் பிரிவு
அவனே தானேயாகிய அந்நெறி ஏகனாகி இறைபணிநிற்க மலமாயை தன்னொடுவல் வினை இன்றே (நூற்பா10) அயரா அன்பின் அரன் கழல்
செலுமே (நூற்பா 11) பேரின்பத்தை அளிப்பவை ஞானமும் சாத்திரமும் ஆகும்.
பேறு - நலம். செல்வம் எ-டு யான் பெற்ற பேறு இவ்வையகம் பெறுக.
பேறு 16 - 1) புகழ் 2) கல்வி 3)வலிமை 4) வெற்றி 5) நன் மக்கள் 6) பொன் 7)நெல் 8) நல்லூழ் 9) நுகர்ச்சி 10) அறிவு 11) அழகு 12) நோயின்மை 13) வாழ் நாள் 14) பெருமை 15) இளமை 16) துணிவு.
பேறுஇன்மை-பயனில்லாமை
பைசந்தி - பைசந்தி வாக்கு அல்லது மொழி. சிந்தனைதனில் உருவாவது உயிருடன் சேர்ந்து வருவது, வாக்கு 4இல் ஒன்று.
பைம்மறி - பையைத் திருப்பிப் பார்த்தல். பைமறியாப் பார்த்தல் மறிக்கப்பட்டவை போலப் பார்த்தல் மறித்தல் - உள் வெளியாகத் திருப்பல்.
பைய - மெல்ல, மெதுவாக
பையக் கொடுத்தார் பரங்கெட்டார் - பரங்கெட்டார் என்பது இங்கு 63 சிவனடியார்களைக் குறிக்கும். தங்களை இவர்கள் கொஞ்சங் கொஞ்சமாகச் சிவனுக்கு ஒப்படைத்தவர்கள்.
பைரவர் -துர்க்கையின் படைக்கணங்கள்.
பைரவன் - சிவ மூர்த்தங்களுள் ஒருவரான வைரவக் கடவுள்.
பைரவி - துர்க்கை
பொகுட்டு - கொட்டை காய், அதாவது, தாமரை மலர் இதழ்களுக்குநடுவில் இருக்கும்பகுதி இதுவே பின்காயாவதும் காயா வதற்கு முன் தாமரை விதைகள் இப்பகுதியில் மெல்லிய உருவில் இருக்கும். பொகுட்டு முற்றிய நிலையில், அவ்விதைகள் தெளிவாகத் தெரியும் பொதிந்து கொள்ளுதல் அடக்கிக் கொள்ளுதல்
பொசிந்து- கசிந்து.
பொதுக் காட்சி - மூவகைக் காட்சிகளில் ஒன்று.
பொது நீக்கல் -ஒருவர்க்கே உரிமையாக்கல்.
பொதுவிதி - முயற்சியைவிட ஊழே வலியது என்பது. பா. சிறப்பு விதி.
பொதுவியல்பு - பொது இலக்கணம்.
பொய் - சுட்டுணர்வு, ஒ. மெய்,
பொய்கை - நீர்நிலை
பொய்கைவாய் முதலை - பொய்கையில் முதலை வாயில் யானை சிக்குண்டு கரையேறமாட்டாமல், தவித்து ஆதி மூலமே என அரற்றி அழைக்கத் திருமால் பறந்தோடி வந்து அம்முதலை வாயினின்று அதனை விடுவித்து, அவ்விரு உயிர்களுக்கும் வைகுண்ட பதவிஅளித்தார் (சிசிபப268),
பொருட்பிரிவு - உடைப் பொருள்; உடைய பொருள் எனப் பொருள் இருவகை. உயிர் உடைப்பொருள். இறைவன் உடைய பொருள்.