பக்கம்:சொன்னார்கள்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111


கடவுள் ஒருவனைப் பணக்காரனாகவோ, ஏழையாகவோ படைக்கவில்லை. எல்லோரையும் ஒரே கோலத்தில்தான் கடவுள் படைக்கிறான். மனிதன் பணக்காரனாவதும் ஏழையாவதும் புத்திசாலித்தனத்தையோ, திறமையையோ தான் பொறுத்தது. சிலர் அதிர்ஷ்டம் என்றும் அதைச் சொல்லுவார்கள்.

—நடிகை செளகார் ஜானகி

அண்ணா நகரில் உள்ள கந்தசாமிக் கல்லூரியில் நான் துணைப் பேராசிரியர்தான். சிலர் என் பெயருடன் பேராசிரியர் எனப் போட்டு விளம்பரம் செய்துவிடுகிறார்கள். நான் பலமுறை வேண்டாம் கூறியிருக்கிறேன். பட்டதாரி கதை எழுதுகிறான் என்று தெரியப்படுத்திக் கொள்வதை அவர்கள் பெருமையாக நினைக்கும்பொழுது நான் தடுக்க முடியுமா?

— ஏ. எஸ். பிரகாசம்

(கதாசிரியர்-டைரக்டர்)


நான் பதவி மீது ஆசை வைத்ததில்லை. ஆசையிருந்திருக்குமானால் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே மததிரிப் பதவியை வகித்திருக்கக் கூடும். எர்ஸ்கின் பிரபு சென்னை கவர்னராக இருந்தபோது எனக்கு அழைப்பு அனுப்பி மந்தரிப் பதவியை ஏற்குமாறு வேண்டிக் கொண்டார். இரண்டு மணி நேரத்தில் பதில் அளிப்பதாகச் சொல்லிவிட்டு வந்து முக்கியமான ஒருவரிடம் கலந்தாலோசித்து மீண்டும் கவர்னரைப் பார்த்து மற்ற மந்திரிகளையும் நியமிக்கும் அதிகாரம் எனக்களித்தால் நான் மந்திரி பதவி ஏற்றுக் கொள்ளுவதாகச் சொன்னேன். அதை அவர்னர் ஒப்புக் கொள்ள மறுக்கவே நானும் மறுத்துவிட்டேன். எனக்கு வெறும் பதவிதான் குறிக்கோள் என்றால் நான் அப்படிச் சொல்லியிருக்கத் தேவை இல்லை.

—டாக்டர் P. வரதராஜூலு நாயுடு (1-6-1947)

(தமது 60-ஆம் ஆண்டு விழாவில்)