பக்கம்:சொன்னார்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

113


ஆங்கிலேயர் சுமார் 300 வருஷங்களுக்குமுன் இந்தியாவுக்கு வந்தபொழுது நம் கைத்தொழில் முன் போலவே சிறப்பாக நடந்து வந்தது. 1602 - ஆம் வருஷம் காப்டன் லங்காஸ்டர் துரை 20 கஜமுள்ள டாக்கா மஸ்லின் துணியைக் கைக்குட்டை போல் மடித்துத் தம் மகாராணி எலிசபெத் அம்மைக்குக் காணிக்கையாக அனுப்பியிருக்கிறார். இன்னமும் ஆங்கிலேயர்களுக்கு இது ஞாபகத்திலிருக்கிறது. ஏனெனில் நான் லண்டனிலிருந்தபோது, என்னிடம் ஆங்கில நண்பர்கள் ‘அழகான டாக்கா மஸ்லின் உன்னிடம் இருக்க வேண்டுமே அதைக் காட்டு’ என்றார்கள். என்னுடைய அறியாமைக்காக விசனப்பட்டேன்.

—டாக்டர் திருமதி அருள்மணி பிச்சமுத்து

(1930-ல், தூத்துக்குடி கதர்க் காட்சியைத் திறந்து வைத்த போது பேசியது.)

நான் முதலில் நாடகத்தில்தான் நடிக்க வந்தேன். என்றாலும், அப்பொழுது அதை நான் தொழிலாக மேற்கொள்ளவில்லை. மேலும் என் தகப்பனாருக்கு நாடகம் என்றாலே பிடிக்காது. நாடகம் சம்பந்தமாக நோட்டிசுகளைக் கையில் கண்டாலும் அவருக்குக் கோபம் வந்துவிடும். அப்படியிருந்தும் நான் அவருடைய செல்லப்பிள்ளை என்ற காரணத்தால் சிலசமயம் விட்டுக் கொடுப்பார்.

—தியாகராஜ பாகவதர் (14 - 1 - 1950)


பள்ளி நேரம் தவிர்த்த நேரங்களில் நான் எங்கள் வீட்டிற்குப் பக்கத்திலிருந்த ஒரு புத்தக பைண்டர் வீட்டில் போய் அவர் செய்யும் வேலைகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பேன். கூடமாட உதவி செய்வேன்; பைண்டிங் செய்ய கற்றுக்கொண்டு நானே பைண்ட் செய்யவும் ஆரம்பித்தேன். முதன்முதலாக ஒரு புத்தகத்தை பைண்ட் செய்த அன்று நான் அடைந்த மகிழ்ச்சிச்கு ஈடுகிடையாது.

—நா.மகாலிங்கம் (1 - 1 - 1975)

8

(தொழிலதிபர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/115&oldid=1016072" இலிருந்து மீள்விக்கப்பட்டது