பக்கம்:சொன்னார்கள்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116


இசையமைப்புக்குப் பாடல் எழுதுவதா? எழுதிய பாடலுக்கு இசை அமைப்பதா? என்று கேட்டால், இசையமைப்பு சிறப்பாக இருந்தால், அதற்குப் பாடல் அமைப்பதும், பாடல் சிறந்து விளங்கினால், அதற்கு இசை அமைப்பதும் நல்லது.

—கவிஞர் சுரதா (10-3-1958)


எனது முதுமைப் பருவம் வரை அவருடன் நான் வாழ்ந்திருக்கமுடியும் என்றும், அவருடனேயே எங்கள் குழந்தைகளும் பெரியவர்களாக வளருவதைப் பார்க்கமுடியும் என்றும் நான் கனவு காண்பது அளவுக்குமீறிய ஆசை என்பதை நான் உணராமல் போய்விட்டேன்.

—ஜாக்குலின் கென்னடி (22-11-1964)

(அமெரிக்க ஜனதிபதியும், தனது கணவருமான கென்னடியின் முதலாவது நினைவு நாள் கூட்டத்தில்.)

தவனை முறையை நாங்கள் கொண்டுவர முதலில் எங்களைத் தூண்டியது ஒரு கடிகார விற்பனைதான். செக்கோஸ்லேவிய கடிகாரமான அதை 16 ரூபாய்க்குகூட, எங்களிடமிருந்து மக்களால் வாங்க முடியவில்லை. பிறகு முதலில் நாலு ரூபாய் கொடுத்து, மீதியைத் தவணையில் கொடுக்கும்படி செய்தோம். தவணை முறை வேலை ஆரம்பமான கதை இதுதான்.

—வி. ஜி. சந்தோஷம் (15-1-1975)

(தொழிலதிபர்)


எனக்கு வாழ்க்கை நான் எதிர்பார்த்தபடியே நன்றாக அமைந்திருக்கிறது. எனக்கு வீடு, ஒரு மகன், கணவர், என் தொழில் எல்லாமே மனசுக்குப் பிடித்தபடி அமைந்திருக்கிறது. நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். நான் ஆசைப்பட்டது கிடைத்திருக்கிறது.

—சர்மிளா டாகூர் (15-12-1974)

(பிரபல இந்தி நடிகை)