பக்கம்:சொன்னார்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36


சத்தென்னும் செம்பொருளை உன்னுதற்கும் போற்றுதற்கும் உரிய இடமாகக் கோயில்கள் கட்டப்பட்டன. நாளடைவில் அக்கோயில்களிலும் சாதிப்பேய் நுழைந்துவிட்டது. ஒரு கூட்டத்தார் இங்கும், மற்றாெரு கூட்டத்தார் உங்கும், இன்னொரு கூட்டத்தார் அங்கும் நின்று கடவுளை வழிபட வேண்டுமாம். கடவுள் முன்னிலையிலுமா உயர்வு தாழ்வு? கடவுளை மரம், செடி, கொடி, பாம்பு, சிலந்தி, யானை முதலியன பூசித்ததாகப் புராணங்கள் புகல்கின்றன. கடவுளின் உருவங்களின் மீது ஈக்கள் மொய்க்கின்றன. பல்லிகள் ஓடுகின்றன. இவைகட்கெல்லாம் இறைவனைத் தொடும் உரிமையிருக்கும்போது, ஆறறிவுடைய மனிதனுக்கா அவ்வுரிமையில்லை. சாதியார் கொடுமை என்னே! என்னே!

—திரு. வி. க. (7 - 5 - 1927)

(மாயவரம் சமரச சன்மார்க்க மாநாட்டில்)


நம் நாட்டைப் பொறுத்தவரையில் கேட்க வேண்டியவர்கள் கேட்க வேண்டிய முறையில் கேட்டால், ஏழை எளியவர்கள்கூட இயன்ற அளவு தருவார்கள்! ஒன்றுக்குக் கேட்டு வாங்கி, அதை வேரறொன்றுக்குப் பயன்படுத்தி, யாரேனும் அதுபற்றிக் கேட்டால், நீ யார் கேட்பதற்கு என்று சிலர் கூறுவதால்தான், மக்களுக்குக் குழப்பம் ஏற்படுகிறது.

—அறிஞர் அண்ணா (24 - 3 - 1968)


பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்ற கொள்கையை ஆதரிப்பவன் நான். அதற்கு என்னல் முடிந்ததை நானும் செய்கிறேன். என்னுடைய டிரைவருக்கு மாதம் 550 ரூபாய் ஊதியமாகக் கொடுக்கிறேன். சமையற்காரர்களுக்கு மாதம் 250 ரூபாய் கொடுத்து இலவசச் சாப்பாடும் போடுகிறேன்.

—ஜிதேந்திரா

(இந்தி நடிகர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/38&oldid=1013146" இலிருந்து மீள்விக்கப்பட்டது