பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வேலைக்காரி

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு நான் சென்னையில் நிதி அளிப்பு விழா நடத்தியதை அறிஞர் அண்ணா அவர்கள் மிகவும் பாராட்டினார். அதிலிருந்து என்னிடம் அவருக்குத் தனியான அன்பு ஏற்பட்டிருந்தது.

அண்ணா அவர்களின் வேலைக்காரி என்ற திரைப்படம் வெளிவந்து தமிழகத்தில் ஒரு புதிய புரட்சியைச் செய்தது. அதன் நூறாவது நாள் விழா கோவை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. ஜூப்பிடர் பிக்சர்ஸ் சோமு அவர்களும் மொகைதீன் அவர்களும் மேற்படி நூறாவது நாள் விழாவிற்கு யாரைக் கூப்பிடலாம் என்று அண்ணாவிடம் கேட்டார்களாம்.

அண்ணா அவர்கள் விழாவிற்கு நாமக்கல் கவிஞர் தலைமை வகிக்கட்டும். சின்ன அண்ணாமலை பாராட்டிப் பேசட்டும் என்று சொன்னாராம். அதன்படி நானும் நாமக்கல் கவிஞர்.அவர்களும் விழாவிற்கு கோவை சென்றோம்.

அப்பொழுதெல்லாம் அண்ணா அவர்களை காங்கிரஸ் காரர்களாகிய நாங்கள் மிகச் சாதாரணமாக நினைத்து, துச்சமாகப் பேசுவோம்.

ஆனால் அதைப் பற்றி எல்லாம் அவர் கவலைப்பட்டுக்கொள்ளுவதில்லை. கோபப்படுவதுமில்லை. அன்று வேலைக்காரி விழாவில் நான் பேசும்போது, “நான் அண்ணாமலை-அவர் அண்ணாதுரை.