பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

155



இன்று கூட்டத்திற்கு வருபவர்கள் எனக்காகவும், உங்களுக்காகவும் வருபவர்கள் அல்ல; காந்தி மகாத்மாவின் பக்தர்கள். ஆகவே கூட்டம் முடியும் வரையில் இருப்பார்கள் என்று சொன்னார்.

அவர் சொன்னதை நம்பித்தான் நானும் அவர் பேசிய பிறகு பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் கலைவாணர் சொல்லியபடி கடைசி வரையில் இருப்பீர்களா? என்று கூட்டத்தைப் பார்த்துக் கேட்டேன்.”

‘கண்டிப்பாக இருக்கிறோம்’ என்று ஏகோபித்த குரலில் மக்கள் பதில் கொடுத்தார்கள்.

உடனே என்.எஸ்.கே.எழுந்து அவருக்கும் எனக்கும் ஏற்பட்ட பந்தயத்தைப் பற்றி மக்களிடம் விளக்கிச் சொல்லி, ‘பந்தயத்தில் சின்ன அண்ணாமலை ஜெயித்துவிட்டார்’ நான் சொன்னபடி ரூ.1000/- த்தை இப்போதே கொடுக்கிறேன், என்று பணத்தைக் கொடுத்தார்.

நான் அதை வாங்கி தக்கர் பாபா வித்யாலயத்திற்கு நன்கொடையாக வழங்கினேன்.