சின்ன அண்ணாமலை
203
எந்த ஊரு என்ன தொழில் செய்கிறார்?” என்றாரே பார்க்கலாம். வந்தவர்கள் அனைவர் முகத்திலும் ஈயாடவில்லை.
நான் உடனே சமாளித்துக் கொண்டு “பாட்டா” அவர்கள் சினிமா பார்ப்பதில்லை. அதனால் அப்படிக் கேட்டுவிட்டார்கள்” என்று சமqளித்து கவிமணி அவர்களைப் பார்த்து ‘பாட்டா’ இவர் உலகிலே சிறந்த நடிகர், தமிழ்நாட்டின் தவப்புதல்வர், சினிமாவில் இவர்தான் “இமயம்” என்றேன்.
“ஓ அப்படியா மகிழ்ச்சி என்று சொல்லி நடிகர் திலகத்தை வாழ்த்தினார். நாங்கள் கவிமணியிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியில் வந்ததும் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள், “இன்னும் பெரிய அறிஞர்கள் நம்மைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை.”
நாம் அதிகமாக உழைத்து அறிஞர்களின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும். நாம் அதிகமாக புகழடைந்து விட்டோம் என்ற கர்வத்திற்கு இன்று சரியான சாட்டையடி கிடைத்தது” என்று கூறினார்.
சொன்னால் நம்பமாட்டீர்கள் அதற்குப்பின் ஒரு மாதத்தில் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள் நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் நடித்த சினிமா ஒன்றைப் பார்த்தார்கள். அந்தப் படத்தின் பெயர் “கப்பலோட்டிய தமிழன்.”
படத்தைப் பார்த்து பரவசமடைந்து சிவாஜி அவர்களை வாழ்த்தி ஒரு அருமையான கடிதம் ஒன்று பாராட்டி எழுதியிருந்தார்கள்.