உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 113 மதி: எங்கள் கிராமத் தலைவர், காசாசை பிடித்து கிழம் -- வா,தம்பி! மற்ற இடங்களையும் பார்க்கலாம். வாலி: ஏதேது! பாவம், வெளியூராயிற்றே, துணை யாகச் சிறிது நேரம் இருக்கலாம் என்று இருந்தேன். உன் கூடவே எவ்வளவு நேரம் பொழுதை ஓட்டுவது? மதி: தம்பி ! என்கூட இருப்பது சலிப்பாகி விட்டதா உனக்கு - இதற்குள்? வாலி (குழைந்து) இல்லை... இல்லை.. உன்கூட இருப் பது ஆனந்தமாகத்தான் இருக்கிறது. அதனால்தான் என்னை மறந்து சுற்றுகிறேன், உன்னோடு மதி: சரி,வா...போகலாம். வாலி: நேரமாகிவிட்டது.நீ ஒவ்வொரு காட்சியையும் பார்த்துக் கொண்டே இருந்தால், காலம் அதிகமாகும். பட்டிக்காட்டான்போல பளபளப்பு கண்டதும் நின்று விடு கிறாய். [மதிவாணன், வாலிபன் கன்னத்தைக் கிள்ள வாலி பன் வெட்கப்படுகிறான். மதி: அடே! இதென்னடா வெட்கம், இளநங்கைபோல! [வாலிபனை உற்றுப் பார்த்தபடி) ஆனால், தம்பி! இந்த அரும்பு மீசை மட்டும் இல்லையா னால் நீ இளமங்கை போலவேதான் இருப்பாய். (இருவரும் வேறு பல காட்சிகளைக் காண்கிறார் கள்... நடனக்காட்சிகள், வேடிக்கைக் காட்சிகள், குரங்காட்டம் போன்றவைகள்... பழக்கடையி லிருந்து பழம் வாங்கித் தருகிறான் மதிவாணன். இருவருமாக கைகோத்துக் கொண்டு ஓடுகிறார் கள் மகிழ்ச்சியுடன்...ராட்டினம் ஏறிச் சுற்று கிறார்கள். சிறிது நேரமானதும் வாலிபன்..)