உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 137 மதி: நன்றி, பெரியவர்களே! மிக்க நன்றி. இந்தப் பெருமை வேழ நாட்டுக்குரியது. எமது வேந்தன் வெற்றி வேலரின் கலை ஆர்வம் எனும் பேரொளியிலே வளர்ந்தது என் இசை. வேழ நாட்டுக்கு கலைத் துறையிலே பணி புரி யும் பேறு எனக்குக் கிடைத்தது. என்னை இவ்வாண்டு கலை விழாவிலே கலை மன்னன்" ஆக்கிய உங்கள் பெருந் தன்மைக்கு என் நன்றி. 84 விழாத் தலைவர்: என்ன பணிவு! என்ன பண்பு! கலை மன்னா வா!

காட்சி- 66 , இடம்: சோலை நாட்டுக் கொலுமண்டபம் இருப்: குமாரதேவி, மதிவாணன், [மதிவாணன் அரசியின் கொலுமண்டபத்துக்கு அழைத் துச் செல்லப்படுகிறான். அருகே சென்று வணக் கம் கூறிவிட்டு, அரசியைப் பார்க்கிறான். அரசி. தன் தங்கமாக இருக்கக் கண்டு திடுக்கிடுகிறான். அவனால் நம்ப முடியவில்லை. ஆச்சரியத்தால் சிலை போல நின்று கொண்டு இமை கொட்டாது அரசியைப் பார்க்கிறான். சபையினர் சிறிதளவு அருவருப்படைகின்றனர். இந்தப் போக்கு கண்டு அரசி முதலிலே ஒரு விநாடி தன் ஆவலை வெளிப் படுத்தும் விழியுடன் காணப்படுகிறாள். மறு கணம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறாள். அமைச்சர் அவளுடைய கையொப்பம் பெற, பரிசு பட்டயத்தை அரசியின் முன்காட்ட, அரசி, அதிலே தன் கையொப்பத்தை பொறித்துவிட்டு. பட்டயத்தைப் பெற்றுக் கொள்ளும்படி மதி வாணனை அழைக்கிறாள், தன் புன்னகையால். சொக்கிய நிலையிலிருந்து மாறாதவனான மதி வாணன் அரசி அருகே சென்று பட்டயத்தைப் பெற்றுக் கொண்டு மீண்டும் வணக்கம் செலுத்தி விட்டு நிற்கிறான். இருவரின் விழிகளும் சந் திக்கின்றன. நிலைமையைச் சரிப்படுத்த அற்சி தீர்மானித்து...}