உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 141 குமார்: கண்ணாளா! என்ன கலக்கம்? என்மீது கோபமா? நான்தான் அரசி என்று கூறாததால் கோபமா? என் நிலைமை அப்படி- துரையே! நான் என்ன செய்வேன்? மதி: நிலைமை! ஆமாம் தங்கமே! நாட்டை ஆளும் மகாராணி நீ --எட்டைத் தூக்கும் ஏமாளி நான். குமார: (பெருமிதத்துடன்) மகா கவி- மண்டலாதி பதிகள் போற்றிப் புகழத்தக்க மகா கவி! மதி: தங்கம்? குமார: என்ன சுண்ணாளா? மதி: இன்னமும் ஏன் அந்த இன்னமுது கொடுத்துக் கொல்கிறாய்? தங்கம்! எனக்கு விடை கொடு. குமார: விடை கொடுப்பதா? மதி: காதலே விஷமாகி விடும் முன்பு எனக்கு விடை கொடு தேவி- பாவி ஏன் வந்தேன், இந்த விழாவுக்கு? தங்கம்! குமாரதேவி! என் அன்பே! அரசாளும் ஆரணங்கே! குமார: இதென்ன குழப்பம் கண்ணாளா--அரசியாக இருப்பதா தவறு? மதி: தவறு அல்ல-பெரு நெருப்பு. நம்மைப் பிரித்து விடும் பெரு நெருப்பல்லவா? தங்கத்தை நான் பெற முடி யும்; குமாரதேவியாரை... குமார்: குமாரதேவி நாட்டவருக்கு மற்றவருக்கு- தங்களுக்கு நான் என்றும் தங்கம்தானே! மதி: பாடிப் பிழைப்பவன் நான்-நாட்டுக்கரசி நீ- குமார: அந்தக் குற்றத்தை மன்னித்து விடு குணாளா! நான் அரசி--ஆயினுமென்ன? ஒரு பெண்ணல்லவா? மதி: வேந்தன் வெற்றிவேலன், என்னைச் சூதுக்காரன், துரோகி என்று தூற்றுவார். உன் நாட்டுத் தலைவர்களோ, ஊர் பேர் அறியாதவன், எப்படியோ அரசியின் மனத்தை மயக்கி விட்டான் என்று ஏசுவார்கள் தங்கம்!