152 சொர்க்கவாசல் அமைச் வெற்றி: புத்தி துளிகூடக் கிடையாது... போய், இன் றைய ஓலைகளைக் கொண்டுவரச் சொல்லுடா, சரை, அறிவிலி—(பணியாள் ஓட) பலகாரம் கொண்டு வரு கிறான் பலகாரம்... [பணியாள் ஓடும் போதே பலகாரத்தில் ஒரு துண்டு எடுத்துப் போட்டுக் கொள்கிறான்...] (மீண்டும் திடீர் யோசனை கொண்டவனாகி] GLU!... [பணியாள் நிற்கிறான்.] கொண்டு வாடா தட்டை [பணியாள் கொண்டு வருகிறான், வாய் திறவாமல். பலகாரத் தட்டைக் கவனியாமல்.] என்னடா இருக்கு, பலகாரம்? [பணியாள் பேச முடியவில்லைவேந்தன் கோபமாக] நீட்டடா இப்படி... [பணியாள் நீட்ட, ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டுச் சுவைத்தபடி...] போதும்... ஓடு! அழைத்து வா, அமைச்சரை! [பணியாள் பெருமூச்சுடன் போகிறான். போகும் தருவாயில், அமைச்சர் வந்து சேருகிறார். முகத் தில் கவலைக் குறிகளுடன்] வெற்றி:என்ன சேதி, இன்று? அமை: (தயக்கத்துடன்) வேந்தே, சோலை நாட்டி லிருந்து ஓலை வெற்றி: (களிப்புடன்) வந்ததா ஓலை- மதிவாணன் இசையிலே மட்டுமல்ல, ராஜ தந்திரத்திலும் கெட்டிக்காரன். அப்போதே தெரியும் எனக்கு! அமை: அரசே!
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/152
Appearance