190 சொர்க்கவாசல் வெற்: புனித விழாவிலே கலந்து கொள்ள மறுப்பது எந்தவிதமான குற்றம் தெரியுமா? மதி: கூறுங்கள் வேந்தே. வெற்: நீ ஒரு நாத்திகன். மதி: நான் நாத்திகனல்ல வேந்தே, நாத்திகனல்ல. கடவுளை மறுக்கவில்லை. பாபம் புரியும்படி தூண்டவில்லை. சத்தியம் வேண்டாமென்று சொல்லவில்லை. சன்மார்க்கம் ஏன் என்று கேட்கவில்லை. சாந்தம், ஒழுக்கம், அன்பு, தயை, நீதி, நேர்மை எதையும் நான் மறுக்கவில்லை . வெற்: சொர்க்கவாசல் விழாவிலே கலந்து கொள்ள மட்டும் மறுக்கிறாய்.. மதி: ஆமாம் அரசே! விழா கூடாது என்கிறேன். மக்கள் வாடுகிறார்கள், வாழ்வில் சுகம் கிடைக்காமல்! நாட்டிலே நரகம் இருக்கிறது. நானே கண்டேன். எனவேதான் விழா கூடாது என்கிறேன். கடவுளை வேண்டாம் என்று கூற வில்லை. வெற்: போதும் உன் புது ஞானம். இன்று விழா வேண் டாம் என்கிறாய். பிறகு துறவு வேண்டாம், குருமார் வேண் டாம் என்று பேசுவாய். பித்தம் வேகமாக வளரும். . மதி: மக்களின் மனமாசு போக்க, ஒழுக்கத்தை வளர்க்க துறவிகள் தேவை என்றால், புத்தர்போல் போதிக்கட்டும், பற்றற்று. பசித்தால் புசித்து, வியர்த்தால் குளித்து, நிழல் கண்டால் படுத்து, செம்பொன்னும் ஓடும் ஒன்றெனக் கண் டுள்ளவர்களே துறவி என்று ஆன்றோரும் சான்றோரும் கூறு கின்றனர். இவர் முறை இவ்விதமாகவா இருக்கிறது? மடா: வேதனை எப்படி இருப்பினும் தேவ காரியத் துக்கு என்று கேட்டால் தட்டாமல் தயங்காமல் காணிக்கை தருகிறார்களே மக்கள். கருத்தற்றவனே ! இதன் பொருள் என்ன? காணிக்கை குவிந்திருக்கிறது குன்றுபோல் மதி: காணிக்கை குவிந்ததே, எதற்குச் செலவிட்டீர்? சன்மார்க்கப் போதனைக்கா?
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/190
Appearance