பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

உருண்டு இரைச்சலிடும் அலையொத்த கடல் போன்றது காலம்!

அதனுடைய இரைச்சலில் அர்த்தமற்ற மொழிகளின் சஞ்சாரம்: கோடை காலத்தில் வைக்கப்பட்ட விருந்தைப் போல விரைவில் ஜீரணமாகி விடுகிறது.

உண்மையிலேயே நொந்து வறுமையின் வெட வெடப்பால் கொடுமையின் குளிரால்-இறுகி வெளியேவரும் வார்த்தைகள்-காலத்தின் தொண்டை வழியச் சென்ருலும் ஜீரணமாக முடியவில்லை,

நொந்து போனவனுடைய சப்தம்-இரக்கமுடைய வனுடைய இரைச்சல்-கருணை கொண்டவனுடைய விம்மல் கதியற்றவனுடைய கூச்சல் அழுகையின் தினமான குரல் காலத்தால் ஜீரணிக்கப்படுவதில்லை.

அண்ணுவினுடைய குரல் மனித சமுதாயத்திற்காகக் கதறி அழுத குரல்!

காலத்தால் அது விழுங்கப்படுவதில்லை. காலத்திற்கே அது கதை கூறும் அசரீரி! நரகத்தோடு தொடர்பு கொண்டவன் கோவிலில் படிக்கட்டாக மிதிபடுகிருன்.

மோட்சத்துக்கு முந்தானே போட்டவள் என்றைக்கும் வாலிபக் கன்னியாகவே இருக்கிருள்.

அவளைக் கிழவியாக்கும் சக்தி காலத்திற்கு இல்லை. அண்ணு மோட்சத்திற்கு முந்தானை போட்ட கன்னி! அவருடைய வாலிபத்தைக் காலம் காதலிக்கிறது. கடவுளிடத்தில் தண்டனை பெற்றவன் உண்மையான மனிதனுக மாறுகிருன்.

அரசாங்கத்திடம் தண்டனை பெற்றவன் மீண்டும் கைதி யாகவே வெளிவருகிருன்.

அரசாங்கக் கைதியைப் பார்த்து ஆண்டவன் கைதி பூரணத்தை நோக்கி ஓடிவா என்றழைக்கிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/18&oldid=564462" இலிருந்து மீள்விக்கப்பட்டது