59
இடது விழி துடித்தது. அந்தத் துடிப்பின் நினைவு முக மாகக் காளத்திநாதன் தோன்றினன். காளத்தி !... உங்கள் பயங்கர மெளனம் என்இனப் பைத்தியமாக்கிக் கொண்டு வருகிறதே நீங்கள் ஏன் இதை உணர மாட்டேன் என்கிறீர்கள் ?...?
இயற்கை அன்னை இசைத்த பூபாள ராகம் முற்றுப் பெற்ற வேளை.
வாருங்கள், மஹேஸ்வரி :
தலைவாழைக் குலைகளின்மீது உராய்ந்தவளாக, விலகி கடந்த போழ்தில், முகமன் ஒலி புறப்பட்டது. படர்ந்த குரல், தொடர்ந்த அவளது குரல்வளையைப் பிடிப்பதைப் போல உணரலானுள் அவள்.
அங்கே தமிழ்ச்சித்தன் அழகே உடைமையாக கின்றான். சிவப்புத் தோலுக்கும் கறுப்புத் துணிக்கும் அமைந்த பொருத்தம் எடுப்பாகவே இருந்தது !
வாருங்கள், மஹேஸ்வரி !’ .
- ஆமாம் !”
- உதய சூரியன் புறப்படுவதற்கு முன்னமேயே கான் புறப்பட்டு வந்துவிட்டேன் 1:
நான் இப்போதுதான் வந்திருக்கிறேன் !
உங்கள் தோழியின் திருமண வைபவத்திற்கு நீங்கள் என்னை வரவேற்க யிருக்க, நான் உங்களை வர வேற்கிறேன் !’
சந்தோஷம் 1:
உள்ளே வாருங்கள். முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறதாம் !! -