உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

031 தமிழகம் தெரியாதாம்! திலகர் பிறந்து ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தீரக்குரல் கொடுத்த பிரதேசத்தில் சம்யுக்த மகாராஷ் டிரம் கேட்டு மக்கள் போர் தொடுத்திருக்கின்றனர். காங்கிரசின் காவலர் காந்தி பிறந்த இடத்தி லிருந்து “மகாகுஜராத் ' கோஷம் ! பகவத்சிங் பிறந்த பூமியில் சீக்கிஸ்தான் பிரச்னை! தாதாபாய் நௌரோஜியைக் கொடுத்த மண் ணில் இப்போது பம்பாய் நகர் மாநிலக் கோரிக்கை. இப்படி இந்த உபகண்டம் முழுவதும் மொழியின் அடிப்படையில் மாநிலம் வகுத்துக்கொண்டு வாழத் துடிதுடித்துக் கொண்டிருக்கிறார்கள். மொழி வழிக் கொள்கை எங்கு பாரத பூமியில் ஒரு உள் நாட்டுப் போருக்கு வித்திட்டு விடுமோ என்று வேற்று நாட்டினரெல்லாம் எண்ணிடும் வகை யில் அரசியல் நிகழ்ச்சிகள் உருவாகிக் கொண்டிருக் கும் இந்த நேரத்திலே தான் புதுமாநில அமைப்பு மசோதா ஒவ்வொரு பிராந்தியத்து சட்டசபை வாயி லையும் தட்டிப் பார்த்து, தேசீய வீரர்களின் கணக் கைப் பைசல் செய்யப் போகிறது. ரு சென்னையைப் பொறுத்த வரையிலே சட்டசபை காங்கிரசுக் கட்சியினர் மார்ச் 26ந் தேதியன்று கூடி சுயமரியாதை உணர்வு பெற்றிருப்போர் அனைவரும் திடுக்கிடத்தக்க சில முடிவுகளை உருவாக்கியிருக் கின்றனர். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/159&oldid=1703708" இலிருந்து மீள்விக்கப்பட்டது