இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
165 நாட்டு பௌலன் உருக்கொண்டிருக்கும் காமராசர் ஆட்சிபீடம் தமிழர் நெஞ்சம் தணலாகியிருப்பதை உணர்ந்து பார்க்க வேண்டும் ! இவர்களைவிடக் கல் நெஞ்சும், மக்கள் சக்தி பற்றி சிறிதளவும் கவலைப் படாத நோக்கும் கொண்டு கொம்பேறி நின்று கர்ஜனை புரிந்தவர்களெல்லாம் பிறகு மணல்மேடு களாய்மாறி காலச்சூறாவளியிலே ஊதிவிடப் பட்டிருக் கிறார்கள் ! எனவேதான் மீண்டும் அறிவிக்கிறோம்-- சென்னை தமிழ்நாடு' ஆவதால் டில்லி செங்கோட்டை சரிந்து விடாது. தமிழர் வீறுபெறுமுன் தரணி யாள்வோரே தன்மானம் பெறுங்கள் ! இல்லையேல் யாகிவிடும் உங்கள் இறுமாப்பு. தவிடுபொடி 02 11