உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அய்யா 164 காமராசரே ! எதிர்க்கட்சிக்காரர்கள் கரும்பு இனிக்கிறது என்று சொல்வதற்காக.. அது கசக்கும் என்று கதையளக்கும் காவலரே! - அவசியம் நேரும்போது - பொதுமக்கள் விரும் பும்போது - ஒரு மாநிலத்துப் பெயரை மட்டுமல்ல; பெரிய நாடுகளின் பெயரையே மாற்றியிருக்கிறார்கள். அயர்லாந்து-பல நூறு ஆண்டுகளாக உலகத் துக்கு அறிமுகமான இந்தப் பெயர் பிறகு 'அயர் என்று மாற்றப்பட்டிருக்கிறது. இப்படி மாறியதால் அயர்பூமியின் செல்வாக்கு செல்லாக் காசாகி விடவில்லை. இந்த உபகண்டத்து அரசியல் நிகழ்ச்சிகளிலும் பெயர் மாற்ற சம்பவங்கள் புதிதல்ல. தென்னகத்தைப் பொறுத்தவரையில் மக்கள் குரலுக்கு மதிப்பு வைத்து பெயர் மாற்றுவதிலே இந்த ஆட்சிபீடம் ஆணவப் போக்கைத்தான் உரிமை யாக்கிக் கொண்டிருக்கிறது. பிணங்கள் பலவிழுந்த பிறகுதான் பித்து மனம் கொண்டோரின் குணம் மாறியிருக்கக் காண்கிறோம். பொட்டி சீராமுலுவின் சவத்தைக் காட்டி எண் ணம் ஈடேறப் பெற்ற ஆந்திர மக்களைத் தான் உதாரணமாக்கிக் கொள்ளவேண்டுமென்று நிலைமை உருவாகு முன்பே, தம்மை அசையாத மேருமென்று நினைத்துக் கொண்டு - சோறுகேட்டோரின் வாயிலே புல்லைத் திணித்து, புசியென்று சொன்ன பிரஞ்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/164&oldid=1703721" இலிருந்து மீள்விக்கப்பட்டது