உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 சில பகுதிகள், தமிழகம் போன்ற பிராந்தியங்களைச் சென்னை மாநிலம் என்ற பெயரிலே இணைத்து வைத் திருந்தனர். தவறு - - அன்னியன் செய்து வைத்துப்போன ஏற்பாடு என்பதை உணர்ந்த ஆந்திர - கன்னட கேரளத்து மக்கள் தனித்தனியே சென்று விட்டனர். இனியும் எஞ்சியுள்ள பகுதியை தமிழ்நாடு என்று அழைப்பது தானே நியாயமும், நேர்மையுங்கொண்ட செயலாக இருக்கமுடியும்? இவர்கள் மாநிலங்களின் பெயர்களை மாற்றி யமைத்ததே கிடையாதா ? ? ஐக்ய மாகாணம் (யுனைடெட் பிராவின்ஸ்) நாடு அறிந்த பெயர்தானே ! வெள்ளைக்காரன் காலத்திலிருந்து உலகத்திற் கும் தெரிந்த பெயர்தான் இது ! அதை ஒருநொடிக்குள் மாற்றினார்களே உத்தரப் பிரதேசம் என்று ! பெசவாடா நகரம்-விஜயவாடா என்று வழங்கு கிறதே ! அப்போது இந்தக் காமராசர் எங்கே போயிருந் தார்? நாடறிந்த பெயர், உலகறிந்த பெயர் அதை மாற்றலாமா என்று அந்த நேரம் யாரும் பிலாக்கணம் படிக்கவில்லையே ! இப்போதுதான்ஞானோபதேசம் பெற்றிருக்கிறார் உலகறிந்த பெயரை மாற்றக்கூடாது என்று.கிடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/163&oldid=1703712" இலிருந்து மீள்விக்கப்பட்டது