இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
170 கிளர்ச்சிப்புகை கிளம்புகிற இடமெல்லாம் ஓடி எங்களை விளம்பரப் படுத்திக்கொள்ளும் நப்பாசைப் படைத்தவர்களல்ல நாங்கள். அதற்காக அல்லலுறு வோர் பக்கம் நிற்காமல் ஓடிவிடுகிறவர்களும் அல்ல. போருக்கு அகழ்கடந்து அரணுக்குள் நுழைய வேண்டுமாயின் அந்த அகழில் பாலமாக இருந்து உங்களுக்குப் பணிபுரிகிறோம். பொதுமக்கள் தொடர்புக்கும் அவ்வாறே ! அமைதி வழியில் அரசினருடன் கலந்துபேசி நன் முடிவு காண்பதாயின் அதற்கும் அவ்வாறே உதவிட என்றும் தயாராயிருப்போம் என உறுதியளிக்கிறேன். (சென்னையில் 3-7-57-ல் தந்தி நிர்வாக ஊழியர் கூட்டப்பேச்சு)