6 169 தபால்காரர்கள் வேலை நிறுத்தம் செய்தால் அது எவ்வளவு பயங்கரமாயிருக்கு மென்று யாரும் கற்பனைகூடச் செய்யமுடியாது. பொது மக்களின் ஆதரவைப் பெறமுடியுமா என்று சிலர் ஐயுறலாம். எந்தத் தொழிலாளிக்கும் இல்லாத பிரச்சார வசதியும். வாய்ப்பும் தபால் தந்தி தொழிலாளர்களுக்குத்தான் இருக்கிறது என்பேன் நான். ஆலைத் தொழிலாளி வேலை நிறுத்தம் செய்வதெனில் ஆயிரமக்களைக் கூட்டி தங்கள் அருமருந்தன்ன தலைவனை அழைத்து வேலை நிறுத்தக் காரணத்தை விளக்குவான், நீங்களோ அப்படியல்ல. தேர்தல் நேரத்தில் அபேட்சகன் வீட்டுக்கு வீடுபோய் ஓட்டு கேட்பதுபோல- தபால் ஏந்திச் செல்லும் தொழிலாளத் தோழர்கள் தபாலைக் கொடுத்துவிட்டு அந்த வீட்டாரிடம் வேலை நிறுத்தத் தகவலையும் கூறிவிட்டு வரலாம். நாளை முதல் சில நாளைக்குக் கடிதம் வராது என்று துவங்கி, காரணத்தை விளக்கி, காதலனின் கடிதம் பார்த்து நிற்கும் காரிகையானாலும் - மைந் தனின் மடல் நோக்கும் மாதாவானாலும் அவர்களைத் தங்களுக்காக பத்து நாளைக்குத் தபால்களைத் தியாகம் செய்யுமாறு கேட்டுக்கொண்டு அவர்களது ஆதரவைப் பெற இயலும் இதை நான் சொல்லுவது, இவ்வளவு வசதி இருக்கிறது. ஆகவே வேலை நிறுத்தம் செய்யுங்கள் என்று தூண்டிவிட அல்ல. இவ்வளவு ஆற்றல் படைத்தவர்கள். ஆகவே, அரசாங்கமே ! அவர்களது குறைகளைக்கேள். என் று அரசுக்கு அச்சுறுத்துவதற்காகவே.
பக்கம்:சொல்லோவியம்.pdf/169
Appearance