உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 வட்டாரம் மகிழ்வதைவிட திராவிடர் கழகத்தினர் தானே கொண்டாடிக் குதூகலிக்கிறார்கள். சென்ற இரண்டு ஆண்டுகளுக்குமுன் எந்தக் கொடியைக் கொளுத்த வேண்டும் என்று தீர்மானித் தார்களோ, அதே கொடியோடு இன்று திராவிடர் கழகக் கொடியும் பின்னிக்கொண்டு பின்னிக்கொண்டு பறக்கிறது என்றால், இதை வேடிக்கை என்று சொல்வதா? வேதனை என்று அழைப்பதா? திராவிடர் கழகக் கொடி, நாம் கரத்திலே தூக்கிய கொடிதான்! அறிஞர் அண்ணா அவர்களும் மற்றவர் களும் பல இடங்களிலே - பட்டி தொட்டிகளிலே ஏற்றி, ஏற்றி மகிழ்ந்த அந்தக் கொடி இன்றைய தினம் காங்கிரசிடம் "சோரம்" போகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்தக் கொடி காங்கிரசுக் கொடி யோடு இணைந்து -பிணைந்து நின்று -ஏற்றி வைத்த நம்மையே பழி தீர்த்துக்கொள்ள- அழித்து விடுவ தற்குப் பாடுபடுகிறது என்றால், இத்தகைய வேத னையை எந்த நாட்டுச் சரித்திரத்திலும் கண் டிருக் கவோ, கேட்டிருக்கவோ முடியாதே! இ ன்னும் சொல்லப் போனால், இன்றைய திராவி டர் கழகக் கொடிக்கு உருவம் அமைத்துக் கொடுத்த, திலே என்னுடைய பங்கும் இல்லாமலில்லை நான் அப்போது 'குடியரசு' எட்டிலே துணை ஆசிரியனாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். கழகத்தின் கொடியை எப்படி அமைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம் - அநேக மாதிரிகள் அலுவல கத்திற்குக் கிடைத்திருந்தன. நானும் அலுவலக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/73&oldid=1703259" இலிருந்து மீள்விக்கப்பட்டது