உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்கள் - 72 - - நெல்லிக்குப்பம் மஜீதை இழந்தோம் லால்குடி நடராசனை துப்பாக்கிக் குண்டுகளுக்கு உணவாக்கி னோம் - நம் அருமைத் தங்கம் கே. வி. கே. சாமியை இழந்து தவித்தோம் - அந்த எட்டாண்டு காலத் திலேதான் பலருடைய கரங்கள் இழக்கப்பட்டன. கொத்தப்பட்டன. அங்கங்கள் அறுத் தெறியப்பட்டன! இத்தகைய சித்ரவதைகளை-சிறைச் சாலைக் கொடுமைகளை-அடக்குமுறை அக்ரமங்களை- ரத்த பலிகளை-உயிர்களை - தத்தம் செய்து வளர்த்த கழகம் - இவ்வளவுக்கும் பிறகு இன்றைய தினம் தேர்தலில் ஈடுபட்டு பதினைந்து இடங்களைக் கைப் யற்றியது என்றால் முதன் முதல் புன்னகை காட்டி, பொங்கிவரும் ஆர்வத்தால் நம்மை அணைத்து மகிழ வேண்டிய பெரியார் அவர்கள் "அழிய மாட்டார்களா இவர்கள்?' என்று அலறுகிறார் என்றால்-உள்ள படியே தாய்மார்களின் பாஷையிலேயே சொல்லப் போனால் இது நம்முடைய போதாத காலம்தான்; துர்ப்பாக்கிய நிலைதான். ய உச்சி முகர்ந்து, "உத்தமர்களே! என்னைவிட்டுச் சென்றவர்களே! ஆனாலும் உழைக்கவே பிறந்தவர் களே! நான் எந்தக் கொள்கையை நாட்டிலே சொல்ல வந்தேனோ அதை என்னைவிட அழகாகச் சொன்ன தம்பிகளே! மாணவர் பட்டாளத்தை ஈர்த்த வர்களே! மக்கள் பெருங் கடலைச் சேர்ந்தவர்களே! உங்களை வாழ்த்துகிறேன்! வாழ்த்துகிறேன்' என்று சொல்ல வேண்டிய தந்தை "வளர விடுகிறேனா பார்! அழித்து ஒழிக்காமல் உட்காருகிறேனா பார்!" என்று சொல்லுகிறார்; சீறிப் புறப்படுகிறது அவரது பட்டா ளம்! காமராசருடைய வெற்றி குறித்து காங்கிரசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/72&oldid=1703258" இலிருந்து மீள்விக்கப்பட்டது