உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களை 79 எடுத்துச் சொல்லி - பெரிய பெரிய கலவரங்களிலே உயிரைத் திரணமாக மதித்துக் குதித்து-போராட்டங்களிலே நேரடியாகக் கலந்து- அதன் காரணமாக அண்ணாவுக்கும், எனக்கும் சிறைத் தண்டனையும்-ஆசைத்தம்பிக்கு தலை ரோமத்தையே சர்க்கார் எடுத்துக்கொள்ளுகிற நிலைமைகள் எல்லாம் ஏற்பட-புதுச்சேரி சம்பவங்கள் குறுக்கிட - அரசியல் துறையிலிருந்தும், சமுதாயத் துறையிலிருந்தும் எடுத்துச் சொல்லுகிற கருத்துக்களை, கலைத்துறை மூலமாகவும் எடுத்துச் சொல்லலாம்; அதற்கு அங்கி ருந்து கைலாகு கொடுக்கிறார்கள்; அதுவும் நாங்க ளாகச் செல்லவில்லை. வருக, வருக" என்று இரு கை கூப்பி வரவேற்கிறார்கள் என்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் கலைத்துறையிலே அடியெடுத்து வைத் தோம். சென்றோம் சென்ற இடத்திலும் எங்கள் கருத்துக்களைச் சொல்லத் தவறவில்லை. அதற்காகப் போராடினோம். நிபந்தனைகள் போட்டோம் நாங்கள் எழுதிக் கொடுப்பதைத்தான் படமாக எடுக்க வேண்டு மென்று! அங்கே, கொள்கையை விலை கூறவில்லை. நாங்கள் அரசியல் என்ற பாலைவனத்திலே நடக் கின்ற நேரத்திலே-இடையிலே ஏதோ நீரூற்றுகள் போலக்கூட இல்லை; கொஞ்சம் இளைப்பாற அங்கே நிற்கும் ஒட்டகத்தின் நிழலில் உட்காருவதைப் போலத்தான் கலை யுலகத்தைக் கருதுகிறோமே தவிர, அங்கேயே ஐக்யமாகிவிடவில்லை! அங்கிருந்து சிலரை இழுத்துக் கொண்டுதான் வந்திருக்கிறோம். என் கலையுலகப் பயணத்தின் காரணமாக நமது புரட்சி நடிகர் எம். ஜி. இராமச்சந்திரன் இயக்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/79&oldid=1703265" இலிருந்து மீள்விக்கப்பட்டது