உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 - நாம் சட்டமன்றத்திற்குச் சென்றிருக்கின்ற நேரத்தில், நம்மைச் சூழ்ந்திருக்கின்ற எதிர்க்கட்சித் தோழர்கள், பங்காளிகள், நம்மைவிட்டுப் பிரிந்தவர் கள், அல்லது அவர்களிடமிருந்து நாம் விடுவித்துக் கொண்ட நிலைமையிலே நமக்கும் அவர்களுக்கும் வேறு வேறு சூழ்நிலைகளில் அமைந்தவர்கள் - இவர் களெல்லாம் நம்மைப்பார்த்துக் கேட்கிறார்கள்; "சட்ட சபைக்குச் சென்றுவிட்டால் திராவிட நாடு கிடைத்து விடுமா ?' என்று, இந்த நேரத்தில் மாத்திரம் அவர்கள் நம்மைப் பார்த்து இந்தக் கேள்வியைப் போடுகிறவர்களல்ல; நாம் எந்தக் காரியம் செய்தா லும் " இதைச்செய்தால் திராவிடநாடு கிடைக்குமா?" என்று கேட்டவர்கள். 99 நாம் வேட்டி கட்டிக்கொண்டு வந்தால், "வேட்டி கட்டிக்கொண்டு வந்தால் திராவிட நாடு கிடைக்குமா ' என்று கேட்பார்கள். சரி, வேட்டி வேண்டாம் கால் சட்டை போட்டுக்கொண்டு வருவோம் என்று வந் தால், "கால்சட்டை போட்டால் திராவிட நாடு கிடைக்குமா ?” என்று கேட்பார்கள். 6 கல்லக்குடி போராட்டத்திலே ஈடுபட்ட நேரத் தில் "கல்லக்குடியிலே போராட்டம் நடத்தி விட்டால் திராவிட நாடு கிடைக்குமா ?" என்று கேட்டார்கள். கல்வித் திட்ட எதிர்ப்புப் போராட்டம் நடத்திய நேரத்தில், கல்வித் திட்டத்தை எதிர்த்து விட்டால் திராவிட நாடு கிடைத்துவிடுமா?" என்றுகேட்டார்கள். நேரு அவர்கள் நம்மையெல்லாம் பார்த்து "நான்சென்ஸ்" என்று கூறிய நேரத்தில், ரயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/84&oldid=1703270" இலிருந்து மீள்விக்கப்பட்டது